ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிக ரன் குவித்த வீரராக விராட் கோலி இருப்பார் என்று நினைப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். க்கிறேன்" என கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று கோலி 100 ரன்கள் அடித்தார். இப்போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அண்மை காலமாக ஃபார்மின்றி தவித்து வந்த கோலி, முக்கியான போட்டியில் சதம் அடித்து தனது இருப்பை நிரூபித்தார். இதனால் விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் பாரட்டி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி போன்ற ஒரு வீரரை நான் பார்த்தது இல்லை என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், "பெரிய போட்டிகளில் சமமான வீரர்கள் இருக்கப்ல் வேண்டும் என்று நான் எப்போதும் சொல்வேன். குறிப்பாக அழுத்தமான நேரத்தில் அசத்தக்கூடிய பெரிய வீரர்கள் தேவை. இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை விட பெரிய போட்டி இல்லை. சர்வதேச போட்டிகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அந்த வகையில் கோலி சிறப்பாக விளையாடியதில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர்கள் பேட்டிங் செய்ததைவிட சாதகமான விஷயம் கிடையாது. எனவே, அந்த போட்டியை வெல்வதற்கு டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அதனை விராட் கோலி மீண்டும் சிறப்பாக செய்து முடித்தார். கோலி நீண்ட காலமாக கிரிக்கெட்டில் சாம்பியன் வீரராக இருந்து வருகிறார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தலை சிறந்தவராக இருக்கிறார். கோலியைத் தாண்டி 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் ஒருவரை நான் பார்த்ததில்லை. தற்போது இந்த வடிவத்தில் என்னையும் தாண்டி மேலே சென்று விட்டார். இந்த வடிவத்தில் அதிக ரன் குவித்த வீரராக அவர் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.இந்த வடிவத்தில் அதிக ரன் குவித்த வீரராக அவர் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: ICC Championship: அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும்... நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேசம் ஆட்டம் காலி..!
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு..? ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி கணிப்பு..!