உழைத்தால் முன்னேற முடியும் என்று பலர் கூறுவார்கள் ஆனால் கடுமையாக உழைத்தால் நம் முன்னேற்றம் வானளவு இருக்கும் என்பது மிகவும் சரியானது. இதனை தற்போது நிரூபித்துக் காட்டி இருக்கிறார் நடிகர் மணிகண்டன். இன்று சொகுசு கார்களிலும், மேடைகளிலும் நின்று பல பாராட்டுகளை பெறும் நடிகர் மணிகண்டன், ஒரு காலத்தில் வழிச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் நடந்தே சென்ற நாட்கள் உண்டு.
மேடைகளின் ஓரங்களில் நின்று கைத்தட்டி கண் கலங்கி வந்த நாட்களும் உண்டு. இப்படிப்பட்ட இவரது ஆரம்ப வாழக்கையில் கையில் பணம் கூட இல்லாமல், தான் உழைத்த சம்பளமான ரூ.150க்காக பல கிலோமீட்டர் அலைய வைக்கபட்டவர். தன் நண்பர்களின் உதவியில் பல நாட்கள் வாழக்கையை கழித்து கொண்டு இருந்தவரை உற்சாகப்படுத்திய அவரது நண்பர்கள், பிரபல டீவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் உற்சாகப்படுத்த, நண்பர்களின் ஆசைக்காக தனது கெரியரை சினிமாவில் ஆரம்பித்தவர்.

பின் சினிமாவில் பல பிரபலங்களுக்கு பின்னணியாக குரல் கொடுத்து வந்தார். நிண்ட நாட்கள் சினிமா வாழ்க்கையில் சரியான சம்பளமும் உணவும் இல்லாமல் கஷ்டப்பட்ட மணிகண்டனுக்கு பல நாள் கடும் உழைப்பின் பலனாக துணை நடிகராக "விக்ரம் வேதாவில்" மாதவன் மற்றும் விஜய்சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் 'காதலும் கடந்து போகும்' போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவரது நீண்ட நாள் துணை நடிகருக்கான உழைப்புக்கு பலனாக அமைந்தது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம். இதில் 'ராஜாக்கண்ணு' என்னும் கதாபாத்திரத்தை கண்முன் கொண்டுவந்து அனைவரையும் கண்கலங்க வைத்தார். இதனை தொடர்ந்து, ஒரு மனிதனுக்கு குறட்டை எவ்வளவு பாதிப்பை தருகிறது எனவும் காதலிப்பவர்களுக்கு குறைவுகள் பெரிதல்ல என்பதை உணர்த்தும் படமான 'குட் நைட்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதை அவரது அபார நடிப்பின் திறமையை பார்த்த இயக்குனர் ஒருவர் 'லவ்வர்' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
இதையும் படிங்க: AI தோற்றத்தில் குடும்பஸ்தன் ஹீரோயின்...! ஒரே மியூசிக் வீடியோவில் ட்ரெண்டிங்...!

கோபத்தை குறைத்து கொண்டு உழைப்பால் முன்னேறி காண்பிக்கும் கதாநாயகனாக இப்படத்தில் நடித்து இருப்பார். இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்த மணிகண்டனுக்கு தற்பொழுது வெளியான "குடும்பஸ்தன்" திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் 50மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி அடைந்துள்ளது.

இப்படி இருக்க, சமீபத்தில் தனியார் சேனலுக்கு மணிகண்டன் கொடுத்த பிரத்தியேகப்பேட்டையில் மனம் திறந்து பேசி இருந்தார். அதில் "சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு வாங்கி, அதற்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து வெகுவிமர்சையாக கிரகப்பிரவேசம் செய்து இருந்தோம். அப்போது என் பிரண்ட்ஸிடம் சென்ற என் அப்பா, "அவனை நான் பெத்தேன், படிக்க வைத்தேன் அவ்வளவுதான், மத்தபடி மீதி எல்லாவற்றையும் நீங்க தான் பாத்துக்கிறீங்க, இனியும் அவன பத்திரமா பாத்துக்கோங்க" என்று சொன்னார். அவர் கூறியது உண்மை தான்.

ஏனெனில் என்னுடைய கெரியர்ல சினிமாவிற்கு நான் தகுதியானவனா என்று நான் நினைக்கும் போதெல்லாம், சினிமாவுக்கு நீ தகுதியானவன் தான் என்று மற்றவர்களை போல போலியாக சொல்லாமல், இல்ல இப்போதைக்கு உனக்கு தகுதி இல்லை, இன்னும் நீ நிறைய கத்துக்கணும் என்று சொல்லி என் பிரண்ட்ஸ் தான் மோட்டிவேட் பண்ணுவாங்க. அதுமட்டுமல்லாமல் கிட்ட தட்ட நாலு வருஷம் எனக்கு வேலையும் இல்ல, எங்க வீட்ல சுத்தமா காசும் வாங்கவே இல்ல, அந்த நாலு வருஷமும் என்னுடைய பிரண்ட்ஸ் பிரவீன் மற்றும் ராகேந்து தான் தினமும் காசு கொடுப்பாங்க" என அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்களுக்கு மணிகண்டன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் பெருகியது.

இந்த நிலையில் தற்போது குடும்பஸ்தன் படத்தில் மாபெரும் வெற்றி அடைந்த கதாநாயகனாக வலம் வரும் மணிகண்டனுக்கு "சிறந்த நடிகருக்கான விருதை" தனியார் தொலைக்காட்சி ஒன்று அளித்தது. விருதைப் பெற்ற மணிகண்டனை பார்த்து தொகுப்பாளராக இருந்த கேபிஒய் பாலா, "லவ்வர்" படத்தில் இடம் பெற்ற "தேன் சுடர்" பாடல் உருவான விதத்தைக் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மணிகண்டன், நாங்கள் படம் நடிக்கும் பொழுது அந்தப் பாடல் இடம் பெறவில்லை. காட்சிகளை மட்டுமே நாங்கள் நடித்துக் கொடுத்தோம். பின்பு அப்பாடலை காட்சிகளுடன் இணைத்த பின்பு எங்களிடம் காண்பித்தார்கள் அதனை பார்த்து நாங்கள் அனைவரும் பிரமித்து போனோம். அந்த அளவிற்கு பாடலுக்கும் காட்சிகளுக்கும் பொருத்தம் கனகச்சிதமாக இருந்தது என்றார்.

பின்பு, பாலாவின் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு மேடையில் இருந்து கீழே இறங்க நினைத்த மணிகண்டனிடம் வழக்கம் போல மிமிக்ரி செய்யுமாறு ரசிகர்கள் கோஷமிட்டனர். ஆனால் மணிகண்டனோ சற்று சுதாரித்து, நீங்க இப்ப மிமிக்ரி பண்ண சொல்லுவீங்க...அப்புறம் வீடியோ பார்த்து கமெண்ட்ல மிமிக்ரி யார் கேட்டா? என்ன கிண்டல் பண்ணுவீங்க. அதனால் மிமிக்ரி செய்யப் போவதில்லை என ரசிகர்களுக்கு தக்லைஃப் கொடுத்தார்.
அப்பொழுதும் அவரை விடாத ரசிகர்கள்,கண்டிப்பாக நாங்கள் கமெண்டில் இப்படி போட மாட்டோம் என தொடர்ந்து கோஷம் எழுப்ப, ரசிகர்களின் அன்புக்கு இணங்கி "பிதாமகன் படத்தில் சூர்யா பேசும் வசனத்தை மிமிக்ரி செய்து" அரங்கத்தையே அலற விட்டார் மணிகண்டன். பின் அவர் மேடையில் இருந்து கீழே இறங்கும் வரை தொடர்ந்து மூன்று நிமிடத்திற்கும் மேலாக மணிகண்டனுக்கு அவர்கள் எழுப்பிய கோஷங்கள் அங்கு வந்திருந்த பிரபலங்களையும் மிரள வைத்தது.
இதையும் படிங்க: குடும்பஸ்தன் படத்தின் காட்சிகள் தான் என் வாழ்க்கை.. மணிகண்டன் கண்ணீர் மல்க ஓபன் டாக்..!