உண்மையிலேயே "உன் அலும்ப பார்த்தவன்….ஒங்க அப்பன் விசில கேட்டவன்" என்ற வரிகளுக்கு சொந்தகாரர் என்றால் அது இசையின் அரக்கன் என்று மக்களால் அன்புடன் அழைக்கும் அனிருத் ரவிச்சந்திரன் மட்டுமே. இவரது படைப்பில் பல பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. குறிப்பாக அனிருத்தின் காதல் வலி பாடல் என்றால் "அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்" என்ற பாடல்தான், "அம்மா அம்மா நீ எங்க அம்மா" என்று அனைத்து உள்ளங்களையும் கரைய வைத்த பாடலையும், விஜயின் பிஸ்ட் பட பாடல்கள் மற்றும் தமன்னாவின் காவாலையா, ரஜினியின் டைகர் முதலிய பாடல்களுக்கு சொந்த காரர்.

ஆரம்பத்தில் விளையாட்டு சிறுவனாக தோற்றமளித்து இசையமைப்பாளரா என சந்தேகம் அடைந்த அனைவரையும் தனது ரசிகர்களாக்கி இன்று இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, டி.இமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் வரிசையில் முதன்மையான இடத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.
இதையும் படிங்க: நயன்தாராவின் சம்பளத்தை பிடித்த பாலிவுட் நடிகை..! நடிப்புக்கு சம்பளமா..அவரது அழகுக்கு சம்பளமா..?

இப்படிப்பட்ட அனிருத் ஆரம்பத்தில் தனது இசை பயணத்தை "ஜினகஷ்" என்ற இசைக்குழு பள்ளியில் ஆரம்பித்தார். அதற்கு பின் அவரது 21ம் வயதில் தனுஷின் '3' படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் "போ நீ போ", "why this கொலவெறி" போன்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து சினியுலகில் இவரது பெயர் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் அடிபட துவங்கியது.

இதனை அடுத்து இவர் இசையில் வெளியான "டேவிட்" திரைப்படத்தின் "கனவே கனவே" பாடல் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியது. பின்பு மீண்டும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்" திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.

இதுவரை இவர், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், கத்தி, என்னமோ ஏதோ, மான் கராத்தே, வடகறி, வேலையில்லா பட்டதாரி, ரோமியோ ஜுலியெட், மாரி, நானும் ரௌடி தான், காக்கி சட்டை, தங்க மகன், வேதாளம், ரெமோ, விவேகம், ரம், கோலமாவு கோகிலா (கோ கோ), தானா சேர்ந்த கூட்டம், Mr.லோக்கல், தும்பா, பேட்ட, தனுசு ராசி நேயர்களே, சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, சாஹோ, பாவ கதைகள், தாராள பிரபு, பட்டாஸ், தர்பார், பூமி, மாஸ்டர், அனபெல் சேதுபதி, டாக்டர், ஜகமே தந்திரம், சுல்தான், ப்ரின்ஸ், டான், ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்), விக்ரம், பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், காத்துவாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், ஜவான், மாவீரன், ஜெயிலர், வீரன், லியோ, வாரிசு, துணிவு, LIC - லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், அமரன், வேட்டையன், அந்தகன், இந்தியன் 2, ஆக்கோ, விடாமுயற்சி போன்ற படங்களுக்கு இசையமைத்தும் பாடல்களை பாடியும் உள்ளார் அனிருத்.

இதுமட்டுமல்லாமல் அடுத்ததாக, ஜெயிலர் 2, கைதி 2, மதராஸி, கூலி, ஜனா நயகன், எஸ் கே 17, இருபத்தியாறு 26 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படி இருக்க, விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கொல்கத்தாவில் நடைபெற இருப்பதால் சென்னையில் முதல் போட்டி நாளை சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்க இருக்கிறது. இதனால் இந்த போட்டி துவங்கும் முன்பு கிரிக்கெட் ரசிகர்களுக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6.30 முதல் 6.50 வரை சுமார் 20நிமிடங்கள் அனிருத் கச்சேரி நடக்க இருக்கிறது.

இந்த செய்திகளை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அனிருத் ரசிகர்கள் என இருதரப்பும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இதையும் படிங்க: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஷ்வத் மாரிமுத்து...! ஷாக்கில் ரசிகர்கள்...!