தமிழ் திரைப்படங்களில் சிறந்த நடிகராவும் சிறந்த அப்பாக்கள் கதாபாத்திரங்களிலும் நடித்து பலரது வாழ்த்துக்களை பெற்ற அபூர்வ நடிகர் தான் எஸ்.வி.சேகர். இவரது சினிமா பயணத்தை குறித்து அலசி ஆராய்ந்து பார்த்தால் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அதில் அடங்கியிருக்கும். ஆரம்ப கால சினிமாக்களின் அடிப்படை மற்றும் மூலதனமாக இருந்தது நாடங்ககள் மட்டுமே. தெருக்களிலும், சாலைகளிலும், அரங்கங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அரங்கேற்றப்படும் நாடகங்களை காண மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வார்கள். ஏனெனில் மக்களின் பொழுது போக்கு அதுவாகவே இருந்தது, அதன் பின் உருவானது தான் சினிமா.

எப்படி நாடங்கங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் ஃபேமசோ, அதேபோல் சினிமாவில் நடிப்பவர்களுக்கு ஃபேமஸ் ஆக ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட நாடக பின்னணியில் இருந்து சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்தவர் தான் எஸ்.வி.சேகர். இவர் 'மைலாப்பூர் பாய்ஸ்' என்ற நாடக கம்பெனியின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டு அதன் பின் தனக்காக உருவாக்கிய நாடக கம்பெனி தான் "நாடகப் பிரியா".
இந்த குழுவை தொடங்கி சுமார் 24 நாடகங்களை அரங்கேற்றினார். 1974 காலகட்டத்திலேயே இவரது நாடகக் குழு, ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என உலகம் முழுவதும் தங்களது நிகழ்ச்சிகளை நடத்தியது. இதனை அடுத்து, "நினைத்தாலே இனிக்கும்" என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கிய இவரது பயணம் இன்றும் நீடித்து கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கேமராவை பார்த்ததும் ஓட்டம் பிடித்த நயன்தாரா.. மகனின் முகத்தை மறைத்து அட்டகாசம்..!

இவரது பல வருட உழைப்புக்கு பலனாக, 'இயல் இசை நாடக மன்றத்தின் கலை மாமணி விருது' மற்றும் 'சிறந்த நாடகக் குழு' விருது முதலில் இவருக்கு கிடைத்தது. அதன்பின், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரதாரர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கமான RAPA விலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக "சிறந்த அகில இந்திய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் விருதையும்", மைலாப்பூர் அகாடமி, நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் என பல பிரபலங்களிடம் இருந்தும் 'சிறந்த நகைச்சுவை நடிகர்' என்ற பட்டத்தையும் பாராட்டையும் பெற்றார். மேலும், தமிழகத்தின் உயரிய கலைவாணர் விருதையும் பெற்றுள்ளார்.

இதுவரை சேகர் இயக்கிய நாடகங்கள் என பார்த்தால் அவன் ஒரு தனி மரம், கண்ணமூச்சி, திரும்பி வந்த மனைவி, பாலவாக்கத்தில் பைத்தியக்காரத் திருடர்கள், குத்தகைதாரர் கட்டளைகள், மேலும் ஒரு எக்ஸார்சிஸ்ட், மகாபாரதத்தில் மங்காதா, சாத்தல் இல்லயேல் காதல், காதுலா பூ, காட்டுல மழை, 1000 உதய் வாங்கிய அபூர்வ சிகாமணி, வால் பையன், எல்லாமே தமாஷ்தான், எல்லாரும் வாங்கா, அதிர்ஷ்டக்காரன், யாமிருக்க பயம் யேயன்?, பெரிய தம்பி, ஹைதராபாத்தில் சின்ன மாப்ளே பெரிய மாப்ளே/ஹனிமூன், எப்பவும் நீ ராஜா, தத்து பிள்ளை, அல்வா, பெரியப்பா, குழந்தைசாமி, மெகா வசூல் உள்ளிட்டவையே.

இதனை தொடர்ந்து இதுவரை இவர் நடித்த படங்கள் என பார்த்தால், நினைத்தாலே இனிக்கும், அந்தமைனா அனுபவம், வருமையின் நிறம் சிவப்பு, ஆகலி ராஜ்யம், சுமாய், பட்டம் பரகட்டும், குடும்பம் ஒரு கதம்பம், பயணங்கள் முடிவதில்லை, தாம்பாத்தியம் ஒரு சங்கீதம், சிம்லா ஸ்பெஷல், மணல் கயிறு, ஸ்பரிசம், மருமகளே வாழ்க்கை, கோபுரங்கள் சைவதில்லை, அதிசயப்பிரவிகள், உருவங்கள் மாறலம், வரதட்சணை கல்யாணம், சீரும் சிங்கங்கள், சுபமுஹூர்த்தம், பிரம்மச்சாரிகள், ஒரு புல்லாங்குழல் அடுத்துள்ளது, தூங்காத கன்னிண்ட்ரு ஒன்று, ஊருக்கு உபதேசம், ராஜா வீட்டு கண்ணுக்குட்டி, பொண்டாட்டி பொண்டாட்டிதான், பொண்டாட்டியே தெய்வம், ஜீன்ஸ், கல்யாண கலாட்டா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, டிராஃபிக் ராமசாமி என பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளங்களை வைத்து இருக்கிறார்.

இப்படி இருக்க பல நாடகங்களை இயக்கியும், பல படங்களில் நடித்தும், அரசியலில் ஈடுபாடும் கொண்ட எஸ்.வி.சேகர், தற்பொழுது இரண்டாவது முறையாக திரையரங்கிற்கே செல்லாமல் ஓடிடியில் வெளியான படத்திற்கு சாபம் விட்டு இருக்கிறார்.
அதன்படி, YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் "டெஸ்ட்". இப்படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் பிறகு நீக்கப்பட்டுவிட்டு விட்டார் பிரபல நடிகர் எஸ்வி சேகர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், டெஸ்ட் படத்தை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் நடிகர் எஸ்வி சேகர்.

அதில், "என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. அந்த வரலாறு தற்பொழுது தொடர்கிறது" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

இவரது பதிவை கண்ட இணையவாசிகள் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'முத்துகுளிக்க வாரீங்களா'...! தனது கணவரை மயக்க வித்தியாசமான ஆடையில் ரகுல் ப்ரீத் சிங்...!