சமீபத்தில் சமந்தா விவாகரத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று காட்டுத்தீயார் இந்தியா முழுவதும் பரவியது. நாக சைதன்யா தரப்பினர் நடிகை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் இதனை வாங்க மறுத்த சமந்தா என்னால் உழைத்து முன்னேற முடியும். அதற்குண்டான திறமை என்னிடம் உள்ளது. உங்கள் பணத்தை நீங்களே வைத்துங்கள் என்று சொல்லி வந்துவிட்டாராம். இதனை கேட்டு ரசிகர்கள் சமந்தாவை பாராட்டி தள்ளினர்.

அதுமட்டுமல்லாமல், விவாகரத்திற்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அவரவர்கள் கைகளில் ஒரே மாதிரி டாட்டூ போட்டு இருந்தனர்.விவாகரத்துக்கு பிறகும் சமந்தா அந்த டாட்டூவை அப்படியே அழிக்காமல் தனது கைகளில் சுமந்து இருந்தார். ஆனால் தற்போது சமந்தா, கூடவே இல்லாத கணவரின் பெயர் கையில் எதற்கு என முடிவெடுத்து அதனையும் தனது கைகளில் இருந்து அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரிய ஹீரோ கொடுத்த இரண்டு பரிசுகள்..! கண்கலங்க கூறி மகிழ்ந்த அமீர்கான்..!

மேலும், உற்றார் உறவினர்கள் உங்களை கைவிட்டாலும் நாங்கள் உங்களை என்றும் கைவிடமாட்டோம் என சமந்தா ரசிகர்கள் கூறிவந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் ஏறிய சமந்தா, ரசிகர்களின் வார்த்தையை நினைவுகூர்ந்து கண்கலங்கியபடி "கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டான படங்களையும் கொடுக்கவில்லை.
இருப்பினும் ரசிகர்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அன்பிற்கு நான் தகுதியானவள் தானா என்றும் எனக்குத் தெரியவில்லை" என பேசி இருந்தார்.

இதனை தொடர்ந்து, தனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது என ஆஸ்திரேலியா சிட்னி பல்கலை கழக விழாவில் சமந்தா கூற, உலகமே அந்த ஆசை என்ன? என உற்று நோக்கி கவனித்து கொண்டு இருந்தது. அப்பொழுது சமந்தா கூறுகையில், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் தனது கல்லூரி படிப்பை நான் முடித்தேன். ஆனால் அதற்கு பிறகு, சிட்னி பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது பெரிய கனவாக இருந்தது ஆனால் அந்த கனவு சில காரணங்களால் நிறைவேறாமல் போய்விட்டது" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா சிட்னி கல்லூரி நிகழ்ச்சி முடுவுக்கு பின் சமந்தா, சிட்னி நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து அதன் புகைப்படங்களை சோலோவாக பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர அதனை பார்த்த சமந்தா ரசிகர்களில் ஒருவர் சாதுர்யமாக கேட்ட கேள்விக்கு ஸ்மார்ட்டாக பதில் கூறி எஸ்கேப் ஆகி இருக்கிறார் நடிகை சமந்தா.

அதன்படி, புகைப்படங்களை பார்த்த இளைஞர் "சரி தனியாக தான் புகைப்படம் எடுத்திர்கள் என்றால் உங்கள் கூட இருந்து புகைப்படங்கள் எடுத்தது யாரு..?" என சாதுர்யமாக கேட்க, இதனை பார்த்த சமந்தா "அட என்னப்பா இதுலயும் சந்தேகமா... சிட்னி சுற்றுலா கைடான நவோமி என்பவர் தான் இந்த புகைப்படங்களை எடுத்தவர்" என்று ஸ்மார்ட்டாக பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: டாப் 10 சம்பளம் வாங்கும் நடிகரில் விஜயை பின்னுக்கு தள்ளிய நடிகர்..! அஜித் எத்தனையாவது இடம் தெரியுமா..!