இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி மற்றும் சண்முகம் என இருவரும் குல்பி சாப்பிட சென்ற நிலையில், சண்முகம் மற்றும் பரணி என இருவரும் குல்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முத்துப்பாண்டி மற்றும் இசக்கி என இருவரும் மறைந்து மறைந்து வருவதை பார்த்து இவர்கள் ஓடி ஒளிந்து மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றனர்.
இதையடுத்து இருவரும் குல்பி வாங்கி சாப்பிடுகின்றனர். உன் கூட இப்படி தனியாக வெளியே வரணும் என்பதற்காகத்தான் குல்பி சாப்பிட கூட கூட்டிட்டு வந்ததாக முத்துப்பாண்டி சொல்கிறான்.

ஒரு சிறிய மரத்திற்கு பின்னால் பரணி மற்றும் சண்முகம் என இருவரும் முழுமையாக ஒளிய முடியாமல் ஒளிந்திருக்க இதை பார்த்த முத்துப்பாண்டி கள்ளக்காதல் ஜோடி என பேச பரணி யாருடா கள்ளக்காதல் இது நல்ல காதல் என சண்முகத்துடன் வெளியே வர இருவரும் ஷாக்காகின்றனர்.
இதையும் படிங்க: சூடாமணியை போல ரத்னாவை அவமானப்படுத்த நடக்கும் சதி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
அதன் பிறகு சண்முகம் குல்பி வண்டியை வீட்டுக்கு அழைத்துச் சென்று எல்லோருக்கும் குல்பி வாங்கி கொடுத்து சாப்பிட சொல்கிறான். குல்பிக்காரன் தினமும் உங்க வீட்டுக்கு வந்துடறேன்.. இங்கதான் நல்லா சேல் ஆகுது என்று சொல்ல சண்முகம் என் சொத்தை அழிக்க பாக்குறியா ஓடுடா என விரட்டி விடுகிறான்.

பிறகு வெங்கடேஷ் உடம்பு முடியல என்று சொல்லி ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு சௌந்தரபாண்டியை சென்று சந்திக்க அவர் ஒரு சொட்டு மருந்தை கொடுத்து அதை ரத்னா மற்றும் அறிவழகனை குடிக்க வைக்க சொல்கிறான். வீட்டில் வெங்கடேஷ் இல்லாததால் இசக்கி அவனுக்கு போன் செய்ய போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் அவளுக்கு சந்தேகம் எழ மறுபக்கம் வெங்கடேஷ் பியூனை சந்தித்து டீயில் சொட்டு மருந்து கலந்து ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்க சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
இதையும் படிங்க: சௌந்தர பாண்டியன் சதியை உடைத்த சண்முகம்! பரணி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் எபிசோட்!