இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் சமீபத்தில் ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது செய்து என்கவுன்ட்டர் செய்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். எனவே சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களைக் கைது செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.

மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு இந்த முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகம் முழுவதும் இருக்கிற அனைத்துவித சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் கட்டுக்குள் கொண்டு வந்து, மிகச் சிறந்த முறையில் காவல்துறை பணியாற்ற வேண்டும். ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையாக செயல்பட்ட நமது காவல் துறை மீண்டும் இரானி கொள்ளையர்களைக் கைது செய்து என்கவுன்ட்டர் செய்ததற்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இத்துபோன இரும்புக்கரத்தை நம்பி பிரயோஜனம் இல்லை... ஸ்டாலின் அரசை கிழித்த வானதி சீனிவாசன்!!

அண்மைக் காலமாக திமுக அரசின் செயல்பாடுகளுக்குப் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார். ஏற்கெனவே வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்ற பல அம்சங்களை பிரேமலதா பாராட்டியிருந்தார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசுடன் இணைந்து போராட தயார் என்றும் பிரேமலதா என்றும் தெரிவித்திருந்தார். இதனால், திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறப்போவதாக ஊகங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையரை என்கவுண்டர் செய்ததற்குப் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் புதிய பயங்கரம்.. பைக்கில் வந்து செயின் பறிக்கும் பெண்கள்.. முதியவர்கள் தான் டார்கெட்..