''திராவிட மண்ணில் திரும்பிய பக்கம் எல்லாம் ஆரியபவன்... ஒரு திராவிடபவன் கூட இல்லையே.. இருந்தா ஓசியில் சாப்பிட்டு ஓடிப்போயிடுவாங்கிற பயமா?'' என திராவிடத்தை நையாண்டி செய்த அதே எஸ்.வி.சேகர்தான் இப்போது, ''எல்லோரும் விரும்பும் திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன்'' என நெகிழ்கிறார்.
எஸ்.வி. சேகர் தந்தையின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், அவரது தந்தையில் பெயரை ஒரு தெருவுக்கு பெயர் சூட்டியுள்ளார். எஸ்.வி.சேகர் நகைச்சுவையுடன் பேசுவார். அவரை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்'' என்றும் ஸ்டாலின் கூறியதும் அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது.
நாடகப்பிரியா குழுவின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலினை, ''எலோருக்குமான முதல்வர்'' என நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம் சேர்த்தார்.
இதையும் படிங்க: பெரியாரை இழிவாக பேசிவிட்டு இங்கே எதுக்கு வந்தீங்க..? நாதக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் எகிறிய திமுக பெண் நிர்வாகி..!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், '' வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். எனக்கு 75 வயசு ஆச்சு.என்ன வச்சி ஒரு கட்சி என்ன பண்ணும். என் பையனுக்கு 40 வயசாயிடுச்சு.அவனை எடுத்துக்கட்டும்.
நானும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். இதுவரைக்கும் தமிழகத்தில் ஓட்டே போடாத ஒரு 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதில் ஒரு மூன்று லட்சம் பேரை ஓட்டு போடுவதற்கான வழிமுறைகளை எல்லாம் நான் மு.க.ஸ்டாலினிடம் கூறி இருக்கிறேன். அது நடந்தது என்றால் நான் கண்டிப்பாக திமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்.தமிழ்நாட்டில் பட்டன் போன் கூட இல்லாமல் எத்தனையோ பிராமணர்கள் 10 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.
பிணம் சுமப்பவர்கள்,டேபிள் கிளீன் பண்ணுபவர்கள், சமையல் வேலை செய்கிறவர்கள் புரோகிதர் வேலை செய்பவர்கள் என பலபேர் இருக்கிறார்கள். அரசியலில் இப்போது இருக்கிற சூழ்நிலை நீடித்தால் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும். நடிகர் விஜய் இன்னும் முழுதாக அரசியலுக்குள் வரவில்லை. அவர் சினிமா சூட்டிங் போல அங்கங்கே சென்று குரூப், குரூப்பா போய் பேசுகிறார். 234 தொகுதிகளிலும் அவரது கட்சி ஆட்களை நிறுத்தப்போகிறார் என்றால் புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது. அது அவருக்கே தெரியும்.

இன்னும் தேர்தல் வர ஒரு வருடம் இருக்கிறது. அவ்வளவு நாட்கள் இருக்கும்போது அவரை இப்போதே நாம் ஏன் எதையும் சொல்ல வேண்டும்? தேர்தல் என்பது கூட்டணி கணக்கு. தமிழகத்தின் வெற்றி கணக்கு என்பது ஒரு மூன்று அல்லது நான்கு லட்சம் ஓட்டுகள் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த நாலு லட்சம் ஓட்டைப் பெறுவதற்கான ஒரு சூட்சமத்தை நான் சொல்லி இருக்கிறேன். அதை இந்த திமுக அரசுக்கு நான் வாங்கி தருவேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகரை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியதற்கு திமுகவிற்குள் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ''நாகரீக அரசியல் செய்ய வேண்டும், எதிரிக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணும் முதலமைச்சரின் பண்பு போற்றத்தக்கது. ஆனால் , எஸ்.வி.சேகர் உள்ளிட்டோருக்கு எத்துனை நன்மை செய்தாலும் அவர்கள் சமூக நீதியை, சமத்துவத்தை, பெரியாரை தொடர்ந்து ஒழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்'' என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்கட்சியினரோ, ''எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் போது எஸ்.வி.சேகர் வீட்டுக்கு நேரடியாக பால் பாக்கெட் கொடுத்து விட்டார்கள் என திமுகவினர் பொங்கினார்கள். இப்போது திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.வி.சேகரின் தந்தை பெயரை ஒரு தெருவுக்கு சூட்டியிருக்கிறார்கள்''எனக் கொதிக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஓ.பி.எஸும் வேணாம்… இ.பி.எஸும் வேணாம்… திமுகவுக்கு ஜம்பாகிய செந்தில் முருகன்..!