சென்னை அடுத்த முட்டுக்காடு படகு குழாமில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணிகள் முடிவடைந்து இன்று சுற்றுலா பயணிகளுக்கு துவக்கப்பட்டது.இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குரு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இன்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் தனியார்பாப்பந்ததார் மூலம் துவக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவாக சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.125 அடி நிளம், 25 அடி அகலம் கொண்ட இரண்டடுக்கு கப்பலில் 100 பேர் அமர்ந்து செல்லும் விதமாக முதல் தளத்தில் முழுவதும் குளிருட்டப்பட்டு பக்கவாட்டில் கண்ணாடிகள் அமைக்கப்படுள்ளதால் இயற்கை காட்சிகளுடன் ரசித்தவாறு பயணம் செய்யலாம் என்பதும் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகள் , பிறந்தநாள் நிகழ்வு, அலுவலக நிகழ்வு, கேளிக்கை நிகழ்ச்சிகள் நடன மேடை என பல்வேறு கொண்டாட்டங்கள், நடத்திட வசதிகளுடன் நட்சத்திர விடுதி உட்புற தோற்றத்தில் வண்ண, வண்ண எல்.இ.டி விளக்குகள் டிஜிட்டல் லேசர் விளக்குகளுடன் உற்சாகத்தை ஏற்படுத்தும் வைகையில் அமைக்க பட்டுள்ளது,

இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையிலும். மேல்தளத்தில் நின்றவாறு சுற்றுவட்டத்தின் இயற்கை காட்சிகளை ரசிகும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது.

இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.தமிழ் நாட்டில் முதல் முறையாக மிதக்கும் உணவக கப்பல் முட்டுக்காட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளை மிகவும் வரவேற்க உள்ளதாக எதிர்பார்க்க படுகிறது..
வெளிநாட்டு பயணிகளின் மற்றும் உள்ளது பயணிகளின் பங்கேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எதுவாக அமைக்கப்பட்டுள்ளது.முட்டுக்காடு படக் இல்லத்தில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான படகுகளில் சுற்றுலா பயணிகள் சாகச பயணம் மேற்கொண்டு வரும் சூழலில் நாளை முதல் மிதக்கும் உணவக கப்பல் இயங்கபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 ஊரில் சர்வதேச பலூன் திருவிழா...எப்போ ..? எங்கே ..? முழுவிவரம் உள்ளே ..!