மணிப்பூரில் பாஜகவுக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ளனர், நரேந்திர மோடி அரசு மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை ஏன் திணித்தது? மணிப்பூரில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளது. அரசிற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. பிறகு ஏன் ஜனாதிபதி ஆட்சி விதிக்கப்பட்டது? அமித் ஷாவின் நிர்ப்பந்தத்துக்கு காரணம் என்ன?
மணிப்பூரில், மத்திய அரசு தனது சொந்த பிரேன் சிங் அரசை கலைத்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில், முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆளும் ஒரு மாநிலத்தில் மத்திய அரசு 356வது பிரிவை அமல்படுத்துவது இதுவே முதல் முறை. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார். புதிய தலைமைக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகும், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மணிப்பூரில், 2022- என்.பிரேன் சிங் இரண்டாவது முறையாக அரசை அமைத்தார். இன்னும் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் மீதமுள்ளது. சட்டமன்றம் இன்னும் கலைக்கப்படவில்லை. ஆனால் மணிப்பூர் ஆளுநர் இப்போது பணிகளைப் பொறுப்பேற்பார்.

மெய்தி சமூகத்திற்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்ட பிறகு, மே 3, 2023 அன்று மணிப்பூரில் வன்முறை காலம் தொடங்கியது. குக்கிஸ், மெய்தி இடையேயான மோதல்களில், 237 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 1500 பேர் காயமடைந்தனர். மணிப்பூரில் இருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். கடந்த ஒன்றரை வருடமாக மணிப்பூர் வன்முறை காரணமாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து விமர்சிக்கப்பட்டார். ஆனால் பாஜகவின் மத்திய தலைமை, முதல்வர் என்.பிரேன் சிங்கை பதவியில் இருந்து நீக்கவில்லை.
இதையும் படிங்க: டெல்லி முதல்வர் பதவியேற்பு விழா… குறிக்கப்பட்ட தேதி… லிஸ்டில் 9 பேர்..!
பிப்ரவரி 9 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்கு முன்பு அவரது ராஜினாமா முடிவுவ் அறிவிக்கப்பட்டது.பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கவிருந்த சட்டமன்றக் கூட்டத்தொடரும் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ராஜினாமா செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 13 அன்று, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக தலைமை முடிவு செய்தது. அமெரிக்க சுற்றுப்பயணத்தில் மணிப்பூர் பிரச்சினை எழுப்பப்படும் வாய்ப்புள்ளதால், பிரதமரின் வருகைக்கு முன்பே முதல்வர் பதவி விலகினார் என்று பாஜகவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகிறன.

மணிப்பூர் வன்முறைக்குப் பிறகு, முதல்வர் என்.பிரேன் சிங் மீது பாரபட்சமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அரசியலமைப்புச் சட்டப் பதவியை வகிக்கும் முதல்வர், மெய்தி சமூகத்திற்காக வெளிப்படையாக ஆதரவாக இருப்பதாக குக்கி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இது தொடர்பான ஒரு காணொளியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்குப் பிறகும் கூட, மணிப்பூரில் தலைமையை மாற்றுவது குறித்து பாஜக பரிசீலிக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை குக்கி அமைப்புகள் விதித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாஜக எம்எல்ஏக்கள் முதல்வர் பிரேன் சிங்கிற்கு எதிராக தொடர்ந்து அணிதிரண்டனர். மாநிலத்தின் சுமார் 19 எம்எல்ஏக்கள் பிரேன் சிங் மீது கோபமாக இருந்தனர்.அக்டோபர் 2024ல், முதல்வரை மாற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினர். இதற்குப் பிறகு, அமித் ஷா மணிப்பூரைக் கையாள முயன்றார் ஆனால் கட்சியில் அதிருப்தி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான பிப்ரவரி 10 அன்று, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரத் தயாராக இருந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜக கிளர்ச்சியாளர்களின் ஆதரவைப் பெற்றுவிடுமோ என்று பாஜக அஞ்சியது. இது நடந்திருந்தால், மத்திய தலைமைக்கும் தர்மசங்கடமாக இருந்திருக்கும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே முதல்வர் ராஜினாமா செய்தார். ஆளுநர் அஜய் பல்லா சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்தார்.
பிப்ரவரி 9 அன்று பிரேன் சிங்கின் ராஜினாமாவுக்குப் பிறகு மணிப்பூர் அரசியலில் இரண்டாவது திருப்பம் ஏற்பட்டது. நிலைமையைக் கையாள, வடகிழக்கு பொறுப்பாளர் எம்.பி.சம்பித் பத்ரா இம்பாலில் முகாமிட்டார். முதல்வர் பதவிக்கான போட்டியில் சபாநாயகர் தோக்சோம் சத்யபிரதா சிங், ஒய்.கெம்சந்த் சிங், டி.பிஸ்வஜித் மற்றும் கோவிந்தாஸ் கோந்தோஜம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. ஆனால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. என்.பிரேன் சிங்கிற்கு ஆதரவாக சுமார் 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் வேறு ஒருவரை மொழிய உடன்படவில்லை.

2022 சட்டமன்றத் தேர்தலில், பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், பாஜக 32 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும், மற்றவை 23 இடங்களையும் வென்றிருந்தன. பின்னர், ஜே.டி.(யு)வின் ஐந்து எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனர். இப்போது பாஜகவில் 37 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது.
ஆனால் எம்எல்ஏக்களின் கிளர்ச்சி, கோஷ்டி பூசல் காரணமாக, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இப்போது பாஜக மீண்டும் அரசை அமைக்க 6 மாதங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அதற்கு முன் மாநிலத்தில் உள்ள குக்கி, மெய்தி குழுக்களை அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஒரே இடத்திற்கு கொண்டுவருவது மத்திய அரசுக்கு முக்கியம். அரசியலமைப்பு விதிகளின்படி, இரண்டு சட்டமன்றக் கூட்டத்தொடர்களுக்கு இடையில் 6 மாத இடைவெளி மட்டுமே இருக்க முடியும். இது நடக்கவில்லை என்றால், சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் குடும்பத்தின் ஆணவம்... நேரு, இந்திராவால் வெட்கப்படுகிறேன்..' மோடி கடும் ஆத்திரம்..!