ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தேவகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்துள்ளார். அஜய் மற்றும் தேவகி கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தேவகியின் பெற்றோர் இவர்கள் காதலை ஏற்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
இதில் தேவகி 6 மாதம் கருவுற்ற நிலையில் தேவகியின் காதலை ஏற்காத அவரது பெற்றோர், கருவை கலைத்து உள்ளனர். அஜய் மீது போலிசில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் சிறுமியை பாலியியல் பலாத்காரம் செய்ததாக கூறி அஜய்யை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அஜய் சிறையில் இருந்த நான்கு மாத காலத்தில் தேவகி பலமுறை அவரைச் சந்தித்தார்.

இந்த விஷயம் வீட்டில் தெரியவந்ததால் தேவகியின் பெற்றோர்களான அவரை அடித்து துன்புறுத்தத் தொடங்கி உள்ளனர். தேவகி தன்னை வீட்டில் அடித்து துன்புறுத்துவதாக அஜய் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் தேவகி இறந்தார். தேவகி இறந்தவிட்டதாக கூறி பெற்றோர் உடனுக்குடன் யாருக்கும் தெரியாமல் உடலை சில மணி நேரத்தில் எரித்து இறுதி சடங்கு செய்தனர். இந்த விஷயம் கிராம மக்களின் கவனத்திற்கு வந்ததும், அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் கியா தொழிற்சாலையில் 900 இன்ஜின்கள் திருட்டு.. 5 ஆண்டுகளாக திட்டமிட்டு கொள்ளை..!

உடனே தேவகியின் பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து அஜய் கூறுகையில், தேவகியின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. தேவகி தன்னை வீட்டில் கொலை முயற்சிப்பதாகச் சொல்லி எனக்கு மெசேஜ் அனுப்பினாள். அவளுடைய மரணம் குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன என்றார்.
தேவகியின் பெற்றோர் அவளை பலமுறை அடித்ததாகவும், கௌரவத்திற்காக அவளை கொலையைச் செய்திருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நிகிதாவின் உடல் விரைவாக தகனம் செய்யப்பட்டது மற்றும் அவர் இறப்பதற்கு முன்பு அஜய்க்கு அனுப்பிய மெசேஜ் போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

கிராமவாசிகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலும், அஜய் அளித்த விவரங்களின் அடிப்படையிலும், இந்த சம்பவத்தில் கௌரவக் கொலை நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இருப்பினும், ஒரு உறுதியான முடிவுக்கு வர போலீசார் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பதி மாவட்டத்தில் மட்டுமல்ல, ஆந்திரா மாநிலம் முழுவதும் கௌரவக் கொலைகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணங்களையும் இனங்களுக்கிடையேயான உறவுகளையும் சமூகம் இன்னும் எந்த அளவுக்கு ஜீரணிக்க முடியவில்லை என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேவகியின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையை போலீஸ் விசாரணை கண்டறிய வேண்டும் என பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்.. அலறிய 4 வயது சிறுவன்.. ஆந்திராவில் அரங்கேறிய சோகம்..!