கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9ம் வகுப்பு மாணவி. இவருக்கும் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருடன் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
குந்தாரப்பள்ளி அருகே முருகன் கோவிலில் நடந்த இந்த திருமணத்தில் பெற்றோர் கலந்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விசேஷம் உள்ளதாகவும், இதற்காக அவைருக்கும் ஆடைகள் வாங்க செல்வதாகவும் கூறி வந்தார். இதை அறிந்து சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

கழுத்தில் தாலி கயிறு மறைத்து வைத்திருந்த நிலையில் அதை கவனித்த ஆசிரியர்கள் குழந்தைகள் நல அலுவலகம், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த தலைவலி... அதிமுக ஒன்றிய செயலாளரால் பரபரப்பு...!
கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து சிறுமியின் பெற்றோர், திருமணம் செய்த தச்சு தொழிலாளி, அவரது பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் முடக்கமா.? ஈபிஎஸ் தரப்புக்கு பிரஷரை எகிற வைக்கும் பெங்களூரு புகழேந்தி.!