அமெரிக்காவின் பரஸ்பர வரித் திட்டத்தின் கீழ் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏப். 2-இல் வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா பதிலடிக் கொடுத்தது.

இதனால் கடுப்பான ட்ரம்ப், சீன பொருட்களுக்கான வரியை 104% ஆக அமெரிக்கா உயர்த்தியது. இதற்கும் சீனா சளைக்கவில்லை. இதற்கு பதிலடியாக அனைத்து அமெரிக்க பொருட்களுக்கான வரி ஏப்.10 முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்துள்ளது.
முன்னதாக, குடியரசு கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசினார். “சில நாடுகள் எந்த அளவுக்கும் பணிந்து செல்ல தயாராக உள்ளன. நீங்கள் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம், வரி தொடர்பாக தயவு செய்து ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வாருங்கள் என என்னிடம் கெஞ்சுகின்றனர்” என்றார்

.
இதற்கிடையே, “அமெரிக்கா உடனான சீனாவின் வரிவிதிப்புப் போர் தீவிரமடைந்ததால், வேறுபாடுகளை ‘சரியான முறையில்’ நிர்வகிப்பதன் மூலமும், விநியோகச் சங்கிலி உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் அண்டை நாடுகளுடனான உறவுகளை சீனா வலுப்படுத்தும்" என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - சீனா இடையிலான வரி யுத்தத்தின் எதிரொலியாக, சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. இந்திய பங்குச் சந்தைகளிலும் இது எதிரொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மும்பை தீவிரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தல்..!
இதையும் படிங்க: அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிக்கல்..! ஆப்பிள், கூகுள், அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!