காவிரி, வைகை குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம், காவிரியில் இருந்து உபரி நீரை மாநிலத்தின் தென் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் தமிழக நதிகளை இணைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தடுப்பணை மற்றும் இணைப்பு கால்வாய்கள் ஆகியவை அடங்கும்.

2020-ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட இத்திட்டத்துக்கு ஆரம்பம் முதலே கர்நாடக அரசு ஆட்பேசம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புய்யான் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: தமிழகத்தில் டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ்.. திமுக அரசின் தோல்விகளைப் பட்டியலிட்ட அண்ணாமலை!
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், ‘காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்க்க முகாந்திரம் இல்லாத காரணங்களையும், பொய்யான தகவல்களையும் கர்நாடகம் தெரிவித்து வருகிறது. இத்திட்டத்துக்கு சாதமான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தயாராக இருக்கிறது’ என்று வாதிட்டனர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘இத்திட்டத்தால் கர்நாடகத்தின் நீர் தேவை பாதிக்கப்படும். எனவே இறுதி முடிவு எடுக்கப்படும்வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தநீதிபதிகள், ‘காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு ஆரம்பநிலை அனுமதியைக் கூட வழங்காத நிலையில் அதற்கு எவ்வாறு தடை விதிக்க முடியும்?

இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் கோரிக்கை சாத்தியமில்லாதது. மேலும், வரைவுத் திட்டங்கள், அதன் சாதக பாதகங்களை விவரிக்கும் ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு அவற்றின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அவற்றை நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் பதிவு செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழக சிறுவர்களிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம் குறைவு: 11 மாவட்டங்கள் குறித்து அறிக்கை வெளியீடு...