திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வீட்டில் தனியாக இருந்த வயது முதிர்ந்த தம்பதி வெட்டி படுகொலை செய்யபப்ட்ட சம்பவமும் அரங்கேறியது. அடுத்தடுத்த இரட்டை கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவினாசி இரட்டை கொலை சம்பவத்தில் கொலை குற்றவாளியான அவர்களது உறவினர் ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா? என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதே போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?
இதையும் படிங்க: ரேஷன் துறையில் ரூ.992 கோடி ஊழலா..? லிஸ்ட் போட்டு மறுக்கும் அமைச்சர் சக்கரபாணி.!

திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், அன்றே இந்த திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா? அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை "தனிப்பட்ட பிரச்சனைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்.. "வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். தனது ஆட்சியில் நடக்கும் அனைத்து தவறுகளையும், எதை போட்டு மறைக்க, என தெரியாமல், யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க கிளம்பியிருக்கும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது, சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது.

இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது. திமுக ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவத , மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமாம எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே இதேபோல் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மும்மொழி கல்வி விஷயத்தில் ஒரே நாடகம்.. திமுக அரசை டாராக கிழித்த அன்புமணி ராமதாஸ்!