தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு ரயில் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வணக்கம் என தமிழில் கூறி உரையைத் தொடங்கிய அவர், ''என் அன்பு தமிழ் சொந்தங்களே... இன்று ராமநவமி. இது ஒரு பவித்திரமான நாள். சற்றுநேரம் முன்பு தான் அயோத்தி ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன. தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து எனக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள். கையெழுத்தையாவது தமிழில் போடுங்கள்.

தி.மு.க. கூட்டணி ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு கொடுத்திருக்கிறோம்.. இவ்வளவு செய்தும் கூட சிலர் அழுது கொண்டிருக்கிறார்கள்.. அவர்களால் அழ மட்டுமே முடியும். ஆன்மிகமும், அறிவியலும், ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல்கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம். புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பம், பாரம்பரியத்தை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளே காரணம்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி... எல்லாம் செய்தும் திமுக ஒப்பாரி வைக்கிறது- சல்லி சல்லியாய் உடைத்த மோடி..!

புதிய ரயில் திட்டங்களால் ரயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிணைந்தால் நாடு வளர்ச்சி, வலிமை பெறும். சுற்றுலா, வணிகத்திற்கு பதிய பாம்பன் பாலம் வழிவகை செய்யும். நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த திறனும் வெளிவந்து கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக ரயில்வேக்கு 7 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கட்டமைப்பு தான் மத்திய அரசின் முதன்மை. இவற்றை எல்லாம் செய்தும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும். அழுதுவிட்டுப் போகட்டும்.
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் ரயில்வே துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆட்சியில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கூட மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது. ஏழை மக்களுக்கு 12 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்ட மூலம் ஒரு கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். மருந்துகள் வாங்க வேண்டுமென்றால் மக்கள் மருந்தகத்தில் வாங்குங்கள். மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும். மருத்துவ படிப்பிற்கு இளைஞர்கள் அயல் நாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கக்கூடாது. தமிழகத்தில் 1400 க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் மருந்தகம் மூலம் ரூ. 700 கோடி மக்கள் சேமித்துள்ளனர்'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எனக்கே ஆட்டமா..? செங்கோட்டையனை வைத்து பாஜக சித்து விளையாட்டு: மோடியை சந்திக்க மறுக்கும் இ.பி.எஸ்