சிவகங்கையில் உணவுத்துறை அதிகாரிகள் ஜுஸ் சென்டர், பழக்கடையில் அதிரடி சோதனை கெட்டுப்போன 200 கிலோ பழங்கள் பறிமுதல் .கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கோடைவெயில் சுட்டெரிக்கும் நிலையில், பொதுமக்கள் பழச்சாறுகள் அருந்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சிவகங்கை நகரில் பல்வேறு கடைகளில் தரமற்ற பழங்களை பயன்படுத்தி பழச்சாறு தயாரித்து விற்பனை செய்வதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் எழுந்தன.

இதையும் படிங்க: தூக்கி வீசப்பட்ட நாற்காலி... பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே அடிதடி... கட்டிப்புரளாத கொடுமையாக நடந்த கலாட்டா...!
இதையடுத்து, இன்று சிவகங்கை உணவுபாதுகாப்புதுறை அலுவலர் சரவணகுமார் சிவகங்கை சிவன் கோவில்பகுதி, அரண்மனைவாசல் மஜித்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஜூஸ் கடைகள் மற்றும் பழக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், அழுகிய நிலையில் இருந்த 200 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சில கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பழரசம் தயாரிப்பவர்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அழுகிய நிலையில் உள்ள பழங்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தனர் மேலும், உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் விதிகளை மீறுபவர் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு.. கொள்ளை முடிந்ததும் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க புறப்பட்ட திருடன்.. மடக்கிபிடித்த போலீஸ்..!