கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே மோதல் நடைபெற்று உள்ளது. இதில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து விழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குனியமுத்தூர் போலிசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அசாருதீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அசாருதீன் குனியமுத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நிலையில், வேறோரு இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனால் அசாருதீனின் நண்பர்களுக்கும், எதிர் தரப்பினர்க்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது இதைத் தொடர்ந்து கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சி.எஸ்.ஆர் பதிவு செய்து இருதரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இருதரப்பினர் இடையே கொடுக்கல், வாங்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் கூடும் 10,000 பெண்கள்.. வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர்..!

இந்த நிலையில் நேற்று இரவு கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவன்யூ பகுதியில் கொடுக்கல், வாங்கலில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய உள்ளது. அப்போது எதிர்தரப்புனர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அசாருதீனை சரமாரியாக குத்தி உள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அசாருதீனை போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிதனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அசாருதீன் உயிரிழந்தார். இது குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அடிதடி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் கத்தியால் குத்திய ஜூட் எனும் அசார், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரபீக் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அதில் குனியமுத்தூர் பகுதியில் தலைமறைவாக சுற்றிக் கொண்டிருந்த அப்பாஸ், சம்சுதீன், முகமது ரஃபிக் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முட்டி போடுடா..! சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர்கள் சஸ்பெண்ட்.. பெற்றோரை நேரில் அழைத்து விசாரணை..!