சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்திற்கு பழங்குடி கலாச்சார நிகழ்வான பஸ்தர் பந்தமின் நிறைவு விழா நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது; துப்பாக்கிச்சூட்டிற்கும், வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது. நக்சலைட்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நக்சலைட் கொல்லப்படும் போது, இந்த பகுதியில் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த பகுதிக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது.

நக்சலைட்களை சரணடையச் செய்தால், அந்த கிராமங்கள் நக்சலைட் இல்லா கிராமம் என அறிவிக்கப்படுவதுடன், அக்கிராமம் வளர்ச்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்து உள்ளார். அனைவரும் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். உங்களை இந்திய அரசும், சத்தீஸ்கர் அரசும் பாதுகாக்கும்.
இதையும் படிங்க: மீண்டும் டெல்லி செல்லும் அண்ணாமலை... கசிந்தது பரபர காரணம்...!

கடந்த மூன்று மாதங்களில் 521 நக்சல்கள் சரணடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 881 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைந்த நக்சலைட்டுகள், வளர்ச்சிக்கு நமக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல, கணினிகள் என்றும், பேனாக்கள் தேவை IEDகள் அல்லது குண்டுகள் அல்ல என்றும் புரிந்து கொண்டுள்ளனர். சரணடைபவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுவார்கள். ஆயுதங்களை தூக்குபவர்கள் ஆயுதப்படையினரால் கையாளப்படுவார்கள். பஸ்டர் பகுதியானது, பயத்திற்கானது என்ற நிலை மாறி, எதிர்காலத்திற்கானது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்படும்.

இன்னும் ஆயுதங்களை வைத்திருக்க விரும்புபவர்களை ராணுவம் கையாளும். என்ன நடந்தாலும், அடுத்த மார்ச் மாதத்திற்குள் முழு நாடும் நக்சல்களிடமிருந்து விடுபடும். முன்பு இந்த பகுதியில் இருந்து யாரும் பேச மாட்டார்கள். இங்கு யாரும் செல்ல வேண்டாம் என்றே கூறுவார்கள். ஆனால், தற்போது 50 ஆயிரம் ஆதிவாசி சகோதர, சகோதரிகளுடன் ராமநவமி மற்றும் அஷ்டமியை இந்த பகுதியில் கொண்டாடுகிறோம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சோலார் மேற்கூரையில் படுத்திருக்கும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாடும் படத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ளார். 'சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் - சுக்மா பிராந்தியம், ஒரு காலத்தில் நக்சல்களின் கோட்டையாக இருந்தது. அச்சம் காரணமாக மக்கள் வெளியே வரவே அஞ்சிய காலம் இது. இப்போது, அங்குள்ள தோண்ட்ரா பஞ்சாயத்தில் சிறுவர்கள் மொபைல் போனில் அச்சமின்றி விளையாடுவதை காணும்போதும், இதயம் மகிழ்ச்சி கொள்கிறது. நம்பிக்கை, வளர்ச்சியை வெளிப்படுத்தும் இந்த படத்தை பகிர்வதில் மகிழ்ச்சி' என்று அவர் பதிவிட்டுள்ளார்
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கே ஒரு கும்புடு... கமலாலயத்தைக் காலி செய்யும் அண்ணாமலை...!