மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக என்ன இருக்கிறது என்று கவனிக்க முடியாமல் தவித்தேன். இதே உரையைத்தான் கடந்த முறையும், அதற்கு முன்பும் கேட்டிருந்தேன். இந்த முறையும் அதே பழைய உரைதான். குடியரசுத் தலைவரின் எப்படி இருக்க வேண்டும் என்று நான் யோசனை சொல்கிறேன். இண்டியா கூட்டணி ஆட்சியில் குடியரசுத் தலைவர் உரையில் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில்தான் இருக்கிறது. எனவே, அரசின் எந்த உரையாக இருந்தாலும் அது முக்கியமாக இளைஞர்களுக்கானதாக இருக்க வேண்டும்.
நாம் வேகமாக வளர்ந்துள்ளோம். ஆனால், இன்னும் வளரும் நாடாகவே இருக்கிறோம். பொது பிரச்சினையான வேலை வாய்ப்பின்மையை நம்மால் சமாளிக்க முடியவில்லை. இந்த நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு தெளிவான பதிலை அரசு அளிக்கவில்லை. இதை இந்த அவையில் யாரும் மறுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை முன்மொழிந்தார். அது நல்ல யோசனைதான். அதன் முடிவுகள் உங்கள் முன்பு உள்ளன. 2014-இல் 15.3 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தற்போது 12.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது 60 ஆண்டுகளில் மிகவும் குறைவான உற்பத்தி பங்களிப்பாகும்.

நான் பிரதமரை குறைகூறவில்லை. அவர் முயற்சி செய்யவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. அவர் முயற்சித்தார். ஆனால், தோல்விடைந்தார் என்று சொல்லலாம். ஒவ்வொரு நாடும் அடிப்படையில் இரண்டு விஷயங்களை ஒருங்கிணைக்கிறது. நீங்கள் நுகர்வினை ஒழுங்கமைக்க முடியும். நுகர்வினை ஒழுங்கமைக்கவும், உற்பத்தியை ஒழுங்கமைக்கவும் நவீன வழி பொருள் உற்பத்திதான். ஆனால், அதிக அளவில் உற்பத்தி செய்வதைவிட அதற்கான பொருட்களை உற்பத்தி செய்வதே சிறந்தது. ஒரு நாடாக உற்பத்தியை ஒழுங்கமைப்பதில் நாம் தோல்வியைந்துள்ளோம். நம்மிடம் உற்பத்தியை ஒருங்கிணைக்கும் சிறந்த நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அடிப்படையில் நாம் செய்தது என்னவென்றால் உற்பத்தி அமைப்பை நாம் சீனர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
இந்த மொபைல் போனை இந்தியாவில் உருவாக்கினோம் என்று சொல்லிக்கொள்ளலாம். இந்த போன் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. அது இந்தியாவில் அசம்பிள் செய்யப்பட்டது. இதற்கான அனைத்து உற்பத்தி பொருட்களும் சீனாவில் உருவாக்கப்பட்டது. நாம் சீனாவுக்கு வரி செலுத்துகிறோம். நமது நாட்டு எல்லைக்குள் சீனர்கள் ஊடுருவி உள்ளார்கள் என்று நம் ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள். இது உண்மை. அதற்கான காரணம் மிகவும் முக்கியமானது. சீனா நமது எல்லைக்குள் இருப்பதற்கான காரணம், மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வியே. இந்தியா உற்பத்தி செய்ய மறுப்பதே சீனா நமது எல்லைக்குள் இருக்க காரணம். இந்தியா இந்தப் புரட்சியை மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்து விடுமோ என்று நான் கவலைப்படுகிறேன்.” என்று ராகுல் காந்தி பேசினார்.
இதையும் படிங்க: பீகார் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா.? 'பீகார் பட்ஜெட்' விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் பதிலடி.!
இதையும் படிங்க: 2026 தேர்தல் சட்டமன்ற தேர்தல்.. திமுகவை வீழ்த்த அரசியல் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு.. ஏற்குமா கட்சிகள்.?