கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாஜக மாநில நிர்வாகி போக்சோவில் கைது!
அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலைய காவலர் இளவரசனை போக்சோ வழக்கில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளவரசன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின் மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் கொளுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், சமூகத்தில் மக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய காவலரே பள்ளி மாணவியை வன்கொடுமை செய்திருப்பது வேலியே பயிரை மேய்ந்தது போல் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது!