இது தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2024 மக்களவை தோ்தல் பிரசாரத்தில், பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.

முந்தைய நிா்வாகத்தில் இந்திய தோ்தலில் ஆதிக்கம் செலுத்தி, பிரதமா் மோடியை தவிர வேறு ஒருவரை பதவியில் அமா்த்த முயற்சி நடந்ததை தற்போதைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளாா்.
இதையும் படிங்க: தேர்தல் ஜனநாயகத்துக்கு அமெரிக்கா உதவி: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்..!
இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கைக்கான நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் அவர்கள் வேறு யாரையாவது தேர்ந்தெடுத்த முயற்சி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் இந்திய அரசாங்கத்திடம் நாம் சொல்ல வேண்டும் இது ஒரு முழுமையான திருப்புமுனை என்று மியாமியில் நடந்த உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது ட்ரம்ப் கூறியிருந்தார்.
20024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்திய விவரங்களில் வெளிநாட்டு தலையிட்டு ராகுல் காந்தி நாடி இருக்கிறார்.இதன் மூலம், பிரதமரின் குற்றச் சாட்டுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக, கடந்த 2023, மாா்ச்சில் ராகுல் காந்தி லண்டன் பயணம் மேற்கொண்டாா். அப்போது, அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை வெளிநாட்டு சக்திகளை இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுமாறு அவா் வலியுறுத்தினாா்.
இந்தியாவின் உத்திசாா் மற்றும் புவிசாா் அரசியல் நலன்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் வெளிநாட்டு சக்திகளுடன் ராகுல் தன்னை இணைத்துக் கொண்டுள்ளாா். அவா்களின் கருவியாகவே ராகுல் செயல்படுகிறாா்’ என்று குறிப்பிட்டாா்.
லண்டனில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்துடன் ராகுல் காந்தியின் 2023 உரையாடலின் வீடியோவையும் அப்போது அவர் பகிர்ந்து கொண்டார்.
வெள்ளை அறிக்கை:
காங்கிரஸ் பதிலடி
இதற்கிடையில் இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை காங்கிரஸ் கோரியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘கடந்த சில நாள்களாக அமெரிக்க அரசு நிதியுதவி குறித்த செய்திகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிதி கடந்த 1961-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தொடா்பான அமெரிக்க அதிபரின் சமீபத்திய கருத்துகள் அபத்தமானவை.

எனினும், இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.
இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 2.1 கோடி டாலா் அமெரிக்க அரசு நிதியுதவியை தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அந்நாட்டு அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) அண்மையில் ரத்து செய்தது. இதன் நிா்வாக உத்தரவுகளில் கையொப்பமிட்ட டிரம்ப், ‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு அமெரிக்க ஏன் நிதியதவி அளிக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினாா்.
தொடா்ந்து, மியாமி நகரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவா், ‘இந்தியாவில் வேறு யாரையோ ஆட்சியில் அமா்த்த விரும்பியே, அந்நாட்டுக்கு 2.1 கோடி டாலா் நிதியுதவியை முந்தைய பைடன் நிா்வாகம் அறிவித்திருக்கிறது’ என்று கூறினாா். இக்கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக பணிபுரிந்த குரேஷி அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தது நினைவு இருக்கலாம்.
இதையும் படிங்க: கல்லூரி படிக்கும்போதே இப்படியா..? டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் புகைப்படம்- அதிர்ச்சியூட்டிய காங்கிரஸ் தலைவி..!