சின்னமாங்காவும், பெரியமாங்காவும் மேடையிலே அடித்து கொண்டது, இரண்டு மாங்காவும் அவுட்
என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பாமகவை விமர்ச்சித்துள்ளார் .
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில் 2026 ல் மொத்தமா வா இல்ல தனியா வா திமுக தொண்டர்கள் தயாரா இருக்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் வா நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம் என்றார் .
திமுகவை விமர்சனம் செய்தாலோ எங்களது வயிற்று எரிச்சலை கொட்டி கொள்கிறார்களோ அவர்கள் விளங்க மாட்டார்கள் இன்று மாங்கா காலி , சின்னமங்காவும், பெரிய மாங்காவும் மேடையிலே அடித்துக் கொண்டது இரண்டு மாங்கா அவுட்டு என்று பாமகவை விமர்சனம் செய்தார்
இதையும் படிங்க: 'அன்புமணியின் ஓரங்க நாடகம்..!’ திமுகவை போலவே கண்கள் பனித்த... இதயம் இனித்த பாமக..!
தொடர்ந்து மேடையில் பேசிய தா.மோ. அன்பரசன் ஒருவர் ஜாட்டியில் அடித்து கொண்டிருக்கிறார்
எங்களிடம் கொடுத்து அடிக்க சொன்னால் நாங்கள் அடித்திருப்போம் நீயே அடித்துக் கொண்டால் எப்படி வலி வரும் என அண்ணாமலையை தாக்கி பேசினார்.
இதையும் படிங்க: திமுகவை பழித்து பேசாதீர்கள்..அப்புறம் குடும்பத்தில் கலவரம் வரும்..ராமதாஸை கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி