அதிகாரம் உள்ள பூனைக்கு அதிகாரம் இல்லா புலியை பார்க்கும் போது கண் மங்கலாதான் தெரியும். அப்படித்தான் இருக்கிறது காவல்துறை உயர் அதிகாரியான வருண் குமார் ஐபிஎஸ்- நாம் தமிழர் கட்சினரின் மோதல்.
‘‘வீட்டில் புலி... வெளியே எலி என்பார்கள். அதுபோல சீமான் மைக் முன்பு பேசினாள் புலி போல் பேசுவார். பேசியதெல்லாம் பேசிவிட்டு என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன் அவர் அதை செய்யவில்லை.
இனிமேல் பொதுவெளியில் சீமான் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’’ என சீமான் மீது பகிரங்கமாக குற்றச்சட்டை தெரிவித்து இருந்தார் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள வருண்குமார்.
இதையும் படிங்க: சீமான் தம்பிகளை சில்லறைகளாக்கிய தவெக... பட்டுவேட்டி கனவில் பறிபோன கோவணம்..!
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், ‘‘நேற்று திருச்சியில் வருண்குமார் என்பவர் தனிப்பட்ட முறையில் ( அதிகாரியாக வரவில்லை என அவரே சொல்கிறார் ) அண்ணன் சீமான் அவர்கள் குறித்து பொதுவெளியில் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கிறார் !

தொழிலதிபர் மூலமாக அண்ணன் சீமான் அவர்கள் தனக்கு செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார் ,யார் அந்த தொழிலதிபர் என்பதைச் சொல்வாரா? மைக் கிடைத்தால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா வருண்? நாம்தமிழர் கட்சிக்கும் உங்களுக்கும் மோதல் என சொல்றீங்க?
36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க? உங்களின் பொய் வழக்குகளும் வழக்கின் போது பறிக்கப்பட்ட அலைபேசிகளை வைத்து நீங்கள் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும் பொது சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது !
நீங்கள் போன அதே நீதிமன்றத்தில் நீங்கள் எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம் !
சட்டமும் நீதியும் யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்! மற்றபடி மன்னிப்பு என்பது அண்ணன் சீமானின் வரலாற்றிலேயே கிடையாது. யார் தூது விட்டது? யார் கெஞ்சியது? யார் பத்திரிகையாளர்களை அனுப்பி பேசியது? என்பதை விலாவாரியாக பேசுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் இந்த சண்டை இப்போதைக்கு ஓயாது போல் தெரிகிறது.
இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்