தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியர்களைப் போலவே வெள்ளை லுங்கி, சட்டை மற்றும் குல்லாவுடன் பங்கேற்றார். இது இஸ்லாமியர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், சீமான் அதனை விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், தொகுதி மறு சீரமைப்பை நான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கின்றேன். இங்கே அனைத்து கட்சி கூட்டம் நடத்துகின்றனர் இதில் எந்த பயனும என தெரிவித்த அவர்,
30 கோடி மக்கள் தொகைக்கு 543 என்ற எண்ணிக்கையில் எம்.பி வைத்து இருந்தார்கள் அதை இப்போது, 6 சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை 3 சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என கொண்டு வர வேண்டும் , இதை நாங்கள் முன்மொழிகின்றோம் என தெரிவித்தார்.

ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடும் இஸ்லாமியர் நான் இல்லை என தெரிவித்த அவர், தம்பி விஜய் இதை விரும்பிகின்றார், விஜய் நோன்பு கஞ்சி கொடுத்ததால் விலை வாசி ஏறியது, மின்தடை ஏற்பட்டது என்றால் விவாதிக்கலாம் , அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் அதனால் என்ன பாதிப்பு எனவும் கேள்வி எழுப்பினார். விஜய்யை அண்ணன் என்று அழைக்க அக்கட்சியினர் திட்டமிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, எத்தனை பேரும் அண்ணன் என இருக்கலாம்,
அன்பின் மகுதியால் வந்த சொல் அண்ணன் எனவும், அம்மா என்று யாரும் முதலில் ஜெயல்லிதாவை சொல்ல வில்லை.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக ஓட்டுகளை ஒருங்கிணைக்கணும்.. இபிஎஸ் கருத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய சீமான்..!

செல்வி என்று சொன்னார்கள்.வயதாக வயதாக பாசத்தில் அம்மா என்று சொன்றார்கள் எனவும் தெரிவித்தார். அன்பின் மிகுதியில் சொல்ல கூடிய வார்த்தை அது எனவும் தெரிவித்தார். மீனவர்களுக்கு ஆதரவாக விஜய் பேசுவது வரவேற்க தக்கது. மீனவர் விவகாரத்தில் காங்கிரஸ்,பா.ஜ.க விற்கு தமிழர்களின் உணர்வுகள் மீது அக்கறை இல்லை. இந்த மக்களின் எதிர்காலத்தை பற்றி திமுக,அதிமுகவிற்கு அக்கறை இல்லை என தெரிவித்த அவர், கேரள மீனவர்கள் எத்தனை பேரை இலங்கை அரசு கைது செய்து இருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்த கலந்தாய்வு தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்காக நடத்தப்படுகின்றது எனவும், எங்களுக்கு ஊடக ஆதரவு இல்லை, அதனால் நாங்களே ஊடகமே மாறனும், குடும்ப தலைவிக்கு ஆயிரம் கொடுப்பீர்கள், இலவச பொருட்கள் தருகின்றோம் என எங்களால் வாக்குறுதி கொடுக்க முடியாது என்ற நிலையில் அதற்கு ஏற்றபடி கட்சியினரை தேர்தல் பணிக்கு தயார் செய்ய வேண்டும் எனவும், எப்போதும் நான் வளர்கின்றேன் என்று சொல்ல முடியாது, வளர்ந்துவிட்டோம் என சொல்ல வேண்டுமே என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவமதிக்கும் அண்ணாமலை… கழறும் தேமுதிக..? சீமானுக்கு தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி..!