அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுக வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் எந்தவித அடையாளங்களும் வெளிப்படுத்தப்படவில்லை, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்
மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தில் நிச்சயமாக குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்
இதையும் படிங்க: ஜனவரி 27முதல் சுற்றுப்பயணம்.. விஜய் ஆட்டம் பயங்கரமா இருக்கும் - நடிகர் தாடி பாலாஜி கொடுத்த அப்டேட்
இதையும் படிங்க: அதிமுகவுக்காக ஆழம் பார்க்கும் பாஜக..? ‘உழவனை மாற்றுவதும் தலைவனை நீக்குவதும்..!’ அலறும் அண்ணாமலை ஆதரவாளர்கள்..!