அமெரிக்காவில் தற்போது பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிபர் டிரம்பின் அதிரடி நடவடிக்கைகளால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு பல நாடுகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசா நடைமுறை முதல் குடிமகன் விவகாரம் வரை அவரது நடவடிக்கைகள் அனைத்தும் தலைவலியாகவே மாறியுள்ளது. இதுமட்டுமின்றி அமெரிக்காவில் இருக்கும் மற்ற நாட்டினரை வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் சீனா இந்த சூழ்நிலையை பயன்படுத்திகொள்கிறது. அதன்படி, பல புதிய முயற்சியை சீனா கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் அனைத்து துறையிலும் சீனா முன்னணியில் இருக்கும் என கூறப்படுகிறது. சீனாவை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் அரசு இயந்திரத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் வணிகர்களையும் இணைத்து ஆலோசனைகளை மேற்கொள்வது. இந்த வழிமுறையில் தேசிய மக்கள் காங்கிரஸ், சீன மக்கள் அரசியல் ஆலோசனை குழு என 2 அமர்வுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு வழங்கிய ரூ.1,74,29,85,00,000 கடன்… இரக்கம் காட்டிய சீனா..!
அதன்படி, முதலில் உள்ள 'தேசிய மக்கள் காங்கிரஸில் நாடு முழுவதும் இருந்து 3000 பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பார்கள். புதிய சட்டம், சட்ட திருத்தம், திட்டங்கள், வேலை அறிக்கை, பொருளாதார திட்டம் உள்ளிட்டவை இங்குதான் தீர்மானிக்கப்படும்/நிறைவேற்றப்படும். இதற்கு பிரதிநிதிகள் வாக்களிப்பார்கள். பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இரண்டாவதாக உள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (CPPCC) ஒரு அரசியல் ஆலோசனை குழு. இந்த குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இருப்பார்கள். தவிர வணிகர்கள், கல்வியாளர்கள், சமூக குழுக்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். யதார்த்த சூழலில் நாடு வளர்ச்சியை எட்ட என்ன தேவைப்படுகிறது? அரசு எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பது குறித்து இந்த குழு பரிந்துரைக்கும்.

இதுத்தொடர்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், சீன இளைஞர்களின் திறனை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது. Chat GPT க்கு மாற்றாக சீனா Deepseekஐ கொண்டு வந்திருக்கிறது. ஆனால் பல துறைகளில் இதுபோன்ற சிறந்த கண்டுபிடிப்புகளை கொடுக்க வேண்டிய தேவை தற்போது அந்நாட்டுக்கு எழுந்திருக்கிறது. எனவே, CPPCC குழுவினர் இது தொடர்பாக அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து கல்வி முறையை மாற்றி அமைப்பது என சீன அரசு முடிவெடுத்திருக்கிறது.
அதன்படி, பெய்ஜிங் பல்கலைக்கழகம், சிங்குவா பல்கலைக்கழகம், ரென்மின் பல்கலைக்கழகம், ஷாங்காய் ஜியாவோ தொங் பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்விநிலையங்களில் AI, Integrated Circuits, Biomedicine, Healthcare, New Energy ஆகிய படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது மாணவர் சேர்க்கையையும் அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வளர்ச்சிக்கான போர் தற்போது சீனா அமெரிக்காவுக்கு இடையேயான போராக மாறியுள்ளது. மற்றொரு பக்கம் சீனாவின் வளர்ச்சி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கூட்டிசெல்லும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போதை மருந்து கொடுத்து பல பெண்களை சீரழித்த மாணவன்..? மாதத்திற்கு 5 பெண்கள் என போலீசார் அதிர்ச்சி தகவல்..!