100 நாட்கள் வேலைத்திட்டம் என்று சொல்லக்கூடிய மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணவீக்கத்தின் அடிப்படையில் ஊதியத்தை சீராக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கிராம மேம்பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
வாழ்க்கைத் தரத்துக்கான செலவு அதிகரித்துள்ளதையடுத்து, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான ஊதிய முறை தேவை, ஊதியத்தை உயர்த்தும்போதும் ஒரே சீராக உயர்த்துதல் தேவை என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது நாகாலாந்து, அருணாச்சல்பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.234 தரப்படுகிறது, அதிகபட்சமாக ஹரியானா, சிக்கிம் மாநிலங்களில் பணியாற்றுவோருக்கு ரூ.374 தரப்படுகிறது. இந்த ஊதியம் இப்போதுள்ள விலைவாசி ஏற்றத்துக்கும், வாழ்க்கை நடைமுறைக்கும் போதாது என்பதால் இதை உயர்த்த வேண்டும், சீரான அளவில் கூலி உயர வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் 3 லட்சம் பேர் பாதிப்பு..! கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் நெசவாளர்கள்..!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சப்தரிகிரி சங்கர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையில் “வேளாண் தொழிலாளர்களுக்கு தற்போது நுகர்வோர் விலை பணவீக்கத்தின் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படகிறது. ஆனால், இந்த விலைவாசி உயர்வு துல்லியமாக பணவீக்கத்தை மதிப்பிடாது, முழுமையாக பணவீக்கத்தின் தாக்கத்தை எடுத்துரைக்காது.

ஆதலால், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கூலி உயர்வு உண்மையான பொருளாதார சூழலுக்கு ஏற்பட, வாழ்த்தைத் தரத்துக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். நாடுமுழுவதும் 100நாட்கள் வேலைத்திட்டத்தில் கூலி சீராக இல்லை, இதை ஒரேசீராக்கி, கூலி உயர்த்துவதையும் சீரான விகிதத்தில் உயர்த்த வேண்டும்.
மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் ஊதிய வழங்குதலில் நியாயத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவும். அதேசமயம், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் இன்னும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிலுவை இருக்கிறது, ரூ12,219 கோடி ஊதிய நிலுவையும், தளவாடங்கள் வகையில் ரூ11,227 கோடியும் என மொத்தம் ரூ.23,446 கோடி நிலுவை இருக்கிறது. இதை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

மத்திய அரசு அடுத்த நிதியாண்டுக்கு ஒதுக்கிய 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கான நிதி ரூ.86 ஆயிரம் கோடியில் ஒரு பங்கு கடந்த ஆண்டு நிலுவைத் தொகையை வழங்கவே போதுமானதாக இருக்கும். அப்படியிருக்கும் போது உண்மையான நிதி என்பது இந்தத் திட்டத்துக்கு ரூ.65,553 கோடிதான்.
இவ்வாறு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மத்திய அரசை வாட்டி எடுத்த ஸ்டாலின்!!