விருதுநகர் ரயில் நிலையத்தில் இரும்புப் பாதை குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து புனலூர் செல்லும் ரயிலில் சோதனை செய்த பொழுது அந்த ரயிலில் 25 கிலோ எடை உள்ள ஐந்து மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூட்டைகளை சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

5 மூடைகளில் சுமார் 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பதும் தெரியவந்தது. அந்த ரேஷன் அரிசி கடத்திவரப்பட்ட நிலையில் அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் ரயில் பயணிகளிடம் விசாரணை செய்ததில் அந்த அரிசி குறித்து யாருக்கும் எந்த வித தகவலும் தெரியவில்லை. இதனால் போலீசார் அரிசி மூட்டைகளை மட்டும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: தப்பித்தார் எடியூரப்பா.. POCSO வழக்கில் இடைக்கால தடை..!

அதைத்தொடர்ந்து பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் இருப்புப்பாதை காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது தூத்துக்குடியைச் சார்ந்த காளிராஜா என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருள்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. அவரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 13 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. காவலர்களுக்கு இலவச நீர்-மோர் பந்தல் திறப்பு!