வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், பூமத்திய ரேகையை ஓட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மீதமான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டும் இன்றி நாளை தமிழகம் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தென்தமிழகங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான ஆரஞ்சு சாலட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு..!
விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், வானம் என்று ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடைய மறந்துராதீங்க மக்களே.. தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!