காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்று பல்வேறு அரசியல் கட்சியினர், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குமரி அனந்தன் பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை என்பது அனைவரும் அறிந்ததே…

தன் தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து, உருக்கமாக பேசியுள்ளார் தமிழிசை. தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டதாக கூறியுள்ளார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து, தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக, தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயரை தனக்கு வைத்து இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டதாக உருக்கமாக பேசியுள்ளார்
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்..!

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர் தன் தந்தை என்றும் இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு தங்களை விட்டு மறைந்திருக்கிறார் என்றும் கூறினார். அவர் பெயர் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ள தமிழிசை, தமிழக அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும், மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம் உங்கள் வழி உங்கள் வழியில் என தெரிவித்தார்.

நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல நாமும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும் என்று உங்கள் ஆசை ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம் போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்...நன்றி அப்பா! மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் என்று மிகவும் மனம் உருக்கமாக தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மடியில் வந்து உட்காரணுமாம்..! மண்டியிட்டும் திருந்தாத எஸ்.வி சேகர்..! நாடகமா..? நயவஞ்சகமா..?