இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக சட்டப்பேரவையில் (மார்ச் 14) தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில், காலை 9.30 முதல் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாளை மறுநாள் (மார்ச் 15) காலை 9.30 மணி முதல் வேளாண் பட்ஜெட் தாக்கலும் எல்இடி திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதேபோன்று இதர 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்கள், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்கள் என மொத்தம் 936 இடங்களில் இன்று பொது பட்ஜெட் நிகழ்வும், வேளாண் பட்ஜெட் நிகழ்வும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மு.க.ஸ்டாலின் அவர்களே...இது பெரிய முட்டாள்தனம்..!' அண்ணாமலை ஆத்திரம்..!
2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றத்தில் தொடங்க உள்ளது. இதில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அப்போது கடந்த ஆண்டு தமிழக அரசின் வருவாய், வரவு செலவு கணக்குகள், பெற்ற கடன்கள், கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த தகவல்களை வெளியிடுகிறார். இதேபோல், 2025ம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட செலவுகள், அதன் வருவாய் வரவுகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.

இதற்கிடையே தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நாளை வேளான் துறை சார்ந்த அறிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட உள்ளார். 17ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 5 நாட்கள் வரை நடைபெற உள்ள விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சென்னையில் 100 இடங்களில் நேரலையில் பார்க்க ஏற்பாடு.!