நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் செல்வதற்கு ரயில் வசதி இல்லாததை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயிலாக ஞாயிற்றுக்கிழமைந்தோறும் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதம் தொழில்நுட்ப காரணங்களுக்காக இந்த சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13 முதல் ஜூன் 1 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நெல்லையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30க்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
இதையும் படிங்க: ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

அதுவே, மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 2 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்நிலையில், 2 மாதங்களாக நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்த ரயில் இயக்கத்தை தொடங்கியுள்ளதால் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில் ஓட்டுநர்கள், ரயில் கார்டு ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: குளிர் மாதங்களுக்கு மாறப்போகும் சவுதி அரேபியா ஹஜ் பயணம்..!