கேரள எல்லைப்பகுதியில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடிவரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் பேபி அணையை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழில் மிகப்பெரிய மோசடி : உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி..!
எனவே அணை பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வருவதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டுவரப்பட்டது.
அனில் ஜெயின் தலைமையிலான இந்தக்குழுவில் தமிழக நீர் வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா,காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் என 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு அமைக்கப்பட்ட பிறகு வரும் ஏழாம் தேதி முதன்முதலாக ஆய்வு நடைபெற இருந்தது. இந்த ஆய்வு வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதுகுறித்து பேசிய பெரியாறு வைகைப் பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்றும் மழை நேரங்களில் தரை பாதையில் வல்லக்கடவு வழியாக அணைப்பகுதிக்கு செல்ல முடியாது., எனவே தமிழக படகுகளை தடையின்றி இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அணைக்குறித்து கேரளாவின் விஷம பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி கம்பத்தில் இருந்து குமுளிக்கு பேரணி நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது… வாய்ப்பே இல்லை… சீமான் தடாலடி..!