தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமையில் திருச்சி தென்னூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மண்டல அளவிலான தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் நிர்வாகிகள் பழனியாண்டி, நடராஜன், திருமலைசாமி, பன்னீர்செல்வம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது தமிழக அரசு சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

பல ஆண்டு காலமாக சம்பளம் இல்லாமல் பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாகக் தினக்கூலி வழங்க வேண்டும், பிரிவு அலுவலகங்களில், உபமின் நிலையங்களில் ஒப்பந்ததாரர் மூலமாக தினக்கூலி வழங்கி ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதை கைவிட்டு நேரடியாக வாரியமே, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை காலிப்பணியிடங்களில் அமர்த்தி தினக்கூலி வழங்க வேண்டும்,
இதையும் படிங்க: எகிறிய மின் கட்டணம்.. மூன்றாவது முறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பலு.. பெண்ணுக்கு இழப்பீடு வழங்க TANGEDCO-க்கு உத்தரவு...
நுகர்வோருக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் அன்றாட பணிகள் செய்யும் கீழ்மட்ட பணியிடங்களை பூர்த்தி செய்யாயததால் வேலை பளுவை சுமப்பதால் தினம், தினம் விபத்து, உயிர்பலி வாங்குவதை தடுத்திட ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையில் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து செய்தியார்களுக்கு பேட்டியளித்த மாநில துணை தலைவர் ரெங்கராஜன், சட்டமன்ற தேர்தலின் போது வந்த தொழிலாளர்கள் 240 நாள் வேலை செய்தால் அவர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்துவோம் என தெரிவித்தனர், மின்சார வாரியம் ஒப்பந்த ஊழியர் இல்லை என அறிக்கை கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் ஊழியர்களை ஒருங்கிணைத்து சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் விசைத்தறியாளர்களின் போராட்டம்.. ஜவுளி உற்பத்தியில் 250 கோடி loss!