ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஐந்தாவது சுற்றிலேயே கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான 67.97 சதவீத வாக்குகள் 14 மேஜைகளில் 17 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எட்டித்தொட முடியாத உயரத்தில் திமுக; ஏக்கப் பெருமூச்சில் நாதக!
ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. திமுக சார்பில் ஏற்கனவே ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரகுமார் களமிறக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டார். அதிமுக, பாஜக, தேமுதிக தேர்தலை புறக்கணித்ததால் அந்த கட்சியினரின் வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் எனக்கூறப்பட்ட நிலையில், நாதக வேட்பாளர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197 வாக்குகள் கிடைத்தன.நோட்டாவுக்கு 18-ம் நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும் கிடைத்தன.
குறிப்பாக ஐந்தாவது சுற்றில் முடிவில் நோட்டாவிற்கு பதிவாகியுள்ள வாக்குகள் அனைவரையும் மலைக்க வைத்துள்ளது. கடந்த கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை விட இரு மடங்கு வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளன. தற்போதைய நிலைமைப்படி நோட்டாவிற்கு 798 வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 55,905 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 12,068 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாதக வேட்பாளரை விட 43,837 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இதனை அடுத்து திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சலசலப்பு... நாதக வேட்பாளர் திடீர் வாக்குவாதம்...!