2025 ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், போட்டியின் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளும் அதன் இரண்டாவது நாளில் மோத உள்ளன. இந்த இரண்டு அணிகளும் தலா 5 முறை இந்தப் பட்டத்தை வென்றுள்ளன. இந்தப் போட்டி ஒருவருக்கொருவர் மிக முக்கிய போட்டியாக கருதப்படுகின்றன.
மார்ச் 23 அன்று நடைபெறும் போட்டிக்காக ரசிகர்களும் வீரர்களும் உற்சாகமாக இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த போட்டிக்கு முன்பு, மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் கோபமாக காணப்பட்டார். சிஎஸ்கே என்ற பெயரைக் கேட்டவுடன், அவரது முகம் கோபத்தால் சிவந்து, அவர் முன்னால் வைத்திருந்த ஜூஸ் கிளாஸை நசுக்கி உடைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான சூழல் ஏற்கனவே உருவாகத் தொடங்கிவிட்டது. இதை விளம்பரப்படுத்த, ஒளிபரப்பாளர்கள் ஒரு விளம்பர வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதில் ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் காணப்படுகிறார்கள். இருவரும் ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது, ரோஹித் 'உங்கள் முதல் போட்டி எப்போது?' என்று கேட்கிறார். அதற்கு பாண்ட்யா சர்வரை அழைத்து 'ஞாயிற்றுக்கிழமை, சிஎஸ்கே' என்று பதிலளித்தார். இதைக் கேட்ட ரோஹித் கோபமடைந்து, கண்ணாடியை கையால் அழுத்தி உடைக்கிறார். பின்னர் பாண்டியா சிரித்துக் கொண்டே சர்வரிடம் அதை சுத்தம் செய்யச் சொல்கிறார்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கைக்கு வந்தது எப்படி.? 2027 உலகக் கோப்பையில் விளையாடுவேனா.? மனம் திறந்த ரோஹித்!

ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையே இரண்டு போட்டிகள் நடைபெறும். முதல் போட்டி மார்ச் 23 அன்று சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும். இந்த நேரத்தில், ரோஹித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி மீது கண்கள் இருக்கும். இது தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம்.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்படுகின்றன. இரு அணிகளும் நிலையான செயல்திறனுக்கு பெயர் பெற்றவை. மும்பைக்கும், சென்னைக்கும் இடையே எப்போதும் ஒரு அற்புதமான போட்டி இருந்திருக்கிறது.

கடந்த 17 ஐபிஎல் சீசன்களில், இரு அணிகளுக்கும் இடையே 37 போட்டிகள் நடந்துள்ளன. அப்போது, மும்பை அணி 20 போட்டிகளில் வென்றுள்ளது. சென்னை அணி 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்தே இருவருக்கும் இடையிலான போட்டியை அறியலாம். இருப்பினும், புள்ளிவிவரங்களைப் பார்த்தால், மும்பை தற்போது இந்தப் போட்டியில் முன்னணியில் உள்ளது.
இதையும் படிங்க: ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா..? சான்ஸே இல்லை.. கெத்தாக அறிவித்த ரோஹித் சர்மா.!