கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த ஆடை.. கூகுளை ஆட்டம் காண வைத்த ரசிகர்கள்.. வைரல் போட்டோஸ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை இணையாயத்தில் ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சித்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து இன்று தனது பெயரை இந்தியா முழுவதும் நிலைநாட்டி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படி பலருடன் இவர் நடித்தாலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த 'ரஜினி முருகன்' படத்தில் வரும் பாடலான "என்னம்மா...இப்படி பண்றிங்களேமா" என்ற பாடலும் "உன் மேல ஒருக்கண்ணு" என்ற பாடலும் இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.
இதனை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இவர் இணைப்பில் வெளிவந்த "ரெமோ" படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை, சிவகார்த்திகேயனுக்கு இணையாக நடித்து காட்டி இருப்பார். மேலும், அப்படத்தில் "வாடி என் தமிழ் செல்வி" என்ற பாடலும் "செஞ்சிட்டாலே" என்ற பாடலும் இன்றளவும் ஃபேமஸ். இப்படி பல படங்களில் நடித்தவர், எப்பொழுது திருமணம் செய்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை கோவாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிங்க: ஸ்ரீலங்காவையே மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. ஹனிமூனில் இப்படி ஒரு சர்ப்ரைஸா..!!
இதனையடுத்து, தற்பொழுது வரை ஹனிமூனில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பிராமண முறைப்படி நடந்த திருமணத்திற்கு பிறகு, கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து, பார்ட்டிகளுக்கும் தனது கணவருடன் ரியல் ஹீரோ, ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து, டான்ஸ் வைஃப் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகிறார்.
இந்த சூழலில், ஹனிமூனின் அடுத்த பயணமாக இலங்கைக்கு செல்ல இருப்பதாகவும், அதற்காக தன்னை ஆயத்தப்படுத்தி கொள்ளும் புகைப்படத்தையும், இலங்கையில் தனது கணவருடன் என்ட்ரி கொடுத்த புகைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார் கீர்த்தி சுரேஷ்.
இதனை தொடர்ந்து, இலங்கைக்கு சென்ற கீர்த்தி சுரேஷை, சிறப்பு விருந்தினராக அழைத்த அங்குள்ள தொழிலதிபர் ஒருவர், அவரது கடையை திறந்து வைக்க சொல்லி இருக்கிறார். இதனால் அவரது அன்புக்கு கட்டுப்பட்டு கடையை திறக்க சென்ற கீர்த்தி சுரேஷுக்கு இலங்கை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், காரில் இருந்து இறங்கிய கீர்த்தி சுரேஷை அங்கிருந்து கடைக்கு செல்லமுடியாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோத, ஒருவழியாக பவுன்சர்களின் உதவியுடன் கடையை சென்றடைந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் கடைக்குள் கீர்த்தி சுரேஷை அழைத்து செல்ல பவுன்சர்கள் பட்ட பாடு மிகவும் கடினமாக இருந்தது. இதனை அடுத்து மேடையில் ஒட்டு மொத்த ரசிகர்களுடன் க்யூட்டாக சிரித்தபடி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் இலங்கையில் கடை திறப்புக்கு அணிந்து வந்த ஆடையை பார்த்து பிடித்து போன அப்பகுதி மக்கள், அவரது கடைதிறப்பு புகைப்படத்தையும் அவர் அணிந்த ஆடையையும் தேடி தேடி பார்த்துள்ளனர்.
இதனை எப்படியோ தெரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ். ரசிகர்கள் இணையத்தில் தேடி அலையாத வண்ணம் தற்பொழுது அந்த உடையுடன் மீண்டும் போட்டோ ஷூட்டுகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த ஹனிமூனுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்.. வெட்கத்தில் சிவந்த அழகிய முகம்..!