ரோஸ் கலர் உடையில் மணிமேகலை...! அழகில் மனதை உடைத்த நடிகை..!
புதுவிதமான ஆடையில் கலக்கி இருக்கிறார் மணிமேகலை.
ஒருவரின் வளர்ச்சியை கண்டு நாடே பாராட்டுகிறது என்று பலராலும் கூறும் இருவரில் முதலில் அனைவரும் கூறுவது விஜே சித்து என்றால் பெண்களில் மணிமேகலை என்றே சொல்வார்கள். அந்த வகையில், தொலைக்காட்சிகளில் பல அவமானங்களையும் வாழ்க்கையில் பல நெருக்கடிகளையும் சுமந்து இன்று தனது சொந்த காலில் கெத்தாக இருப்பவர் தான் மணிமேகலை என்று சொல்லலாம்.
இவர் 2018ம் ஆண்டு துணை நடன இயக்குனர் ஹுசைனை காதலித்து பெற்றோரின் சம்மதத்தை மீறி திருமணம் செய்தார். அதுவரை நன்றாக இருந்த அவரது வாழ்க்கையின் சோதனை ஓட்டங்கள் அதன் ஆரம்பமானது. அதன் பின், தனது நகைகளை வைத்து வாழ்கையை தொடங்கிய இவர்களுக்கு முதல் அடி விழுந்தது.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு சுந்தர் சி வைத்த செக்..! மூக்குத்தி அம்மன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்..!
என்னவெனில், மணிமேகலை ஹுசைனுக்கு வாங்கி கொடுத்த "காஸ்லி பைக்கை" யாரோ ஒருவர் திருடி செல்ல மனவேதனையின் உச்சிக்கே சென்றனர். இதுவரை அந்த பைக் அவர்களுக்கு கிடைக்கவும் இல்லை.
இதற்கிடையில், பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் வேலை செய்து கொண்டிருந்த மணிமேகலை, தனது குடும்பத்திற்கென சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
அந்த காருக்கு சரியாக பணம் கட்டவில்லை என கூறி நான்கு மாதங்களிலேயே அனைவரது முன்னிலையிலும் வங்கி ஊழியர்கள் எடுத்து சென்றனர். பின் வீட்டிற்கும் வாடகை கொடுக்க முடியாமல் சாப்பிடவும் வழிசெலவிற்கும் பணமில்லாமல் இருவரும் சுற்றித்திருந்த நாட்கள் அதிகம் என மணிமேகலை கூறியிருக்கிறார்.
இப்படி இருக்க, தனது சொந்தங்கள் மத்தியிலும், தங்கைகளை அவமதித்தவர்கள் முன்னிலையிலும் நன்றாக வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என முடிவு எடுத்த மணிமேகலை மீண்டும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன்பின், சின்ன சின்ன நிகழ்ச்சிகளில், அவருக்கு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைக்க, பின் "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சி அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதில் கோமாளியாக அவதாரம் எடுத்தவர் பின் அதே "குக் வித் கோமாளியின் தொகுப்பாளராக களம் இறங்கி அனைவருக்கும் பிடித்த மணிமேகலையாக மாறினார்.
இந்த நிலையில், தனது சபதத்தை கடின உழைப்பால் நிறைவேற்றும் வகையில் சாதாரண காருக்கு பதிலாக விலையுயர்ந்த காரையும், வாடகை வீட்டுக்கு பதிலாக பண்ணை வீடு, அப்பார்ட்மெண்ட் வீடு என இரண்டு வீடுகளும், இழந்த நகைகளை மீட்டும், 2மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களுடன் இணையத்திலும் சம்பாரித்து இன்று தனக்கென அடையாளத்துடன் மணிமேகலையும் அவரது கணவரும் வாழந்து வருகின்னர். இப்படி சிங்கபெண்ணாக குக் வித் கோமாளியில் வலம் வந்த மணிமேகலை, எனது இத்தனை வருட உழைப்பை ஒரே ஷோவில் முடித்துவிட்டார் பிரியங்கா.
இந்த நிலையில், மணிமேகலையின் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: "நிக்க தேவை பூமாதா.. நாம வாழ தேவ கோமாதா".. தமன்னாவின் டையலாக்கில் மிரட்டும் ஓடேலா-2..!