×
 

மாலை பொழுதின் மயக்கத்தில் அதுல்யா ரவி.. இளசுகளை இழுக்கும் அழகிய புகைப்படம்..!

கவர்ச்சி நடிகை அதுல்யாவின் சொக்க வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

சினிமா துறையில் சிறிய கேரக்டரில் கால் தடம் பதித்த சிலர், தற்பொழுது கவர்ச்சி அழகியாக மாறி பல படங்களுக்கு கால் ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு உள்ளனர். அப்படிப்பட்ட கவர்ச்சி நட்சத்திரங்கள் மத்தியில் உலா வரும் நடிகை தான் 'அதுல்யா ரவி'. ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணாக தோற்றமளித்தாலும் சினிமா அவரை காலப்போக்கில் கவர்ச்சி நாயகியாக மாற்றி உள்ளது. அதே போல், பார்க்க அழகாக இருக்கும் அதுல்யா, சேலையில் கூட கவர்ச்சியாக தான் தெரிகிறார். அந்த அளவிற்கு அனைவரையும் வருடி இழுக்கும் கவர்ச்சி முகத் தோற்றத்தை உடைய அழகிய சிற்பமாக மாறி இருக்கிறார் அதுல்யா.

இப்படி இருக்க, நடிகை அதுல்யா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் என்றால் அது "நாகேஷ் திரையரங்கம்" தான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் இவரது நடிப்பு வெளியுலகத்திற்கு தெரியாமல் போனது. இதனை தொடர்ந்து மனம் தளராத அதுல்யா, தனது அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தார்.

அவர் காத்திருப்புக்கு பலனாக இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில், புதுமுக நடிகர் ஜிகே உடன் இணைந்து நடித்த "காதல் கண் கட்டுதே" என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். ஆனால் திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடித்தாலும் பத்திரிகைகளில் இப்படம் நல்ல கருத்துக்களை பெற்றது.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் "டெஸ்ட்"..! "யாரும் கண்டுகொள்ளவில்லை".. நடிகர் மாதவன் வருத்தம்..!

பின், 2018ம் ஆண்டு இயக்குநர் துரை இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், ரோசிணி பிரகாஷ், பாலா சரவணன் ஆகியோருடன் அதுல்யா ரவி நடித்து வெளியான திரைப்படம் "ஏமாலி". இப்படத்தில் "ரித்து" என்ற கதாபாத்திரத்தில் நடித்த அதுல்யா,  இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து தலைமுடியின் நிறத்தில் மாற்றம் செய்து இருந்தார். பின் இவரது நடிப்பில் வெளிவராமல் தாமதமான "நாகேஷ் திரையரங்கம்" திரைப்படமும் வெளியானது.

இதனை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு வெளியான "சுட்டு பிடிக்க உத்தரவு" என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகர் விக்ராத்திற்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பை பார்த்து பிடித்து போன இயக்குநர் சமுத்திரக்கனி அவரது "நாடோடிகள் 2" திரைப்படத்தில் சசிகுமார், அஞ்சலி, பரணி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அதுல்யாவையும் நடிக்க வைத்தார். மீண்டும் தனது அடுத்த படைப்பான "அடுத்த சட்டை" என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அதுல்யாவை நடிக்க வைத்தார் இயக்குனர் சமுத்திரக்கனி. 

இதனை அடுத்து, "வட்டம்" என்ற திரைப்படத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா மற்றும் மஞ்சிமா மோகன் போன்றோருடன் நடித்து, பின் சாபிமாரி, காடவர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மீண்டும் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.இப்படி பல படங்களில் நடித்து இன்று தனக்கென ரசிகர்களை வைத்திருக்கும் அதுல்யா ரவி, தனது இன்ஸ்ட்டா பதிவில் தனது ரசிகர்களுக்காக எப்பொழுதும் அவரது புகைப்படத்தை பதிவிடுவார். அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை மிரளவைத்துள்ளது. 

முத்துமணி மாலையை கழுத்தில் அணிந்து தனது இடையை வளைத்து காந்த கண்களால் ஆளை மயக்கும் கொள்ளை அழகில் தனது புகைப்படத்தை இளசுகளின் இதயத்தை உடைக்கும் வண்ணம் பதிவிட்டு இருக்கிறார் நடிகை அதுல்யா.

இதையும் படிங்க: சமந்தா சென்ற சோலோ ட்ரிப்...! பெண் சிங்கம் சிங்கிளாக வலம் வந்த புகைப்படம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share