மேடையில் கண்கலங்கிய சமந்தா...! உறைந்து போன ரசிகர்கள்...!
நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சமந்தா கண்ணீர் விட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இந்திய திரைதுறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சமந்தா என்றும் கியூட்டாக சிரித்தபடியே இருப்பார். இவரது சிரிப்பிற்கு அடிமையான ரசிகர்கள் பலர் உண்டு. ஆனால் குறிப்பிட்ட சில ஆண்டுகளாக அவர் சிரிப்பதும் இல்லை படங்களில் நடிப்பதும் இல்லை, இதற்கு காரணம் இவரது விவாகரத்து. ஆம்,தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர்.
இதனை அடுத்து, சிறிது காலம் அமைதியாக இருந்த நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். பின் இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரபலங்கள் வாய்பிளக்கும் அளவிற்கு இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முன்னாள் கணவரின் டாட்டூவை அழித்த சமந்தா.. இதுவும் கடந்து போகும் என வெளியிட்ட போட்டோ..!
இந்த சம்பவங்களினால் மனவேதனையில் இருந்த சமந்தா தன்னுடைய தனிமையை போக்க, ஈஷா யோகா மையம் போன்ற பல பகுதிகளுக்கு சென்று தன்னை ஆசுவாசப்படுத்தி வந்தார். இப்படி இருக்க, நாக சைதன்யாவே தன்னுடைய வாழக்கையை மாற்றி வாழும் பொழுது நம்மால் முடியாத என புரிந்து கொண்ட சமந்தா, சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என கூறி தற்பொழுது ஆலா மொடலைண்டி, ஜபர்தாஸ்த், கல்யாண வைபோகமே, ஓ! பேபி, பித்த கதலு, அன்னி மஞ்சி சகுனமுலே, சாம் ஜாம் போன்ற படங்களை இயக்கி, ஒரு இயக்குனரின் சிறந்த முதல் படத்திற்கான நந்தி விருது, சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது அல மொடலைண்டிக்காக தெலுங்கு, ஹைதராபாத் டைம்ஸ் திரைப்பட விருதுகள் 2011,
சிறந்த அறிமுக இயக்குனருக்கான SIIMA விருது, முதலிய விருதுகளுக்கு சொந்தக்காரியான இயக்குநர் 'நந்தினி ரெட்டி' இயக்கும் திரைப்படத்தில் நடிகை சமந்தா இணைந்து நடித்து வருவதுடன் முற்றிலும் பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையாக உருவாகி வரும் "பரதா" என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனுடன், சமந்தா அனைத்து பெண்களுக்கும் ஸ்விட்டான மெசேஜ் சொல்லும் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில், விவாகரத்திற்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அவரவர்கள் கைகளில் ஒரே மாதிரி டாட்டூ போட்டு இருந்தனர்.விவாகரத்துக்கு பிறகும் சமந்தா அந்த டாட்டூவை அப்படியே அழிக்காமல் தனது கைகளில் சுமந்து இருந்தார். ஆனால் தற்போது சமந்தா, கூடவே இல்லாத கணவரின் பெயர் கையில் எதற்கு என முடிவெடுத்து அதனையும் தனது கைகளில் இருந்து அளித்துள்ளார்.
இப்படி தன் வாழ்வில் கடந்து வந்த துன்பங்களை எல்லாம் முற்றிலும் அழித்து புது அவதாரமாக வந்த சமந்தாவுக்கு ரசிகர்களும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதற்கு பதில் சொல்லும் விதமாக நடிகை சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் தற்பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி அதில்," கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டான படங்களையும் கொடுக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அன்பிற்கு நான் தகுதியானவள் தானா என்றும் எனக்குத் தெரியவில்லை" என மேடையில் கண்கலங்கி பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: அனுபமா படத்தில் என்ட்ரி கொடுக்கும் சமந்தா..! திரும்பி வந்துட்டனு சொல்லு என அமர்க்களம்..!