வாரத்தின் கடைசி நாளில் இப்படியா?... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை!
சில நாட்கள் தங்கம் விலை சற்றே சரிந்தாலும், மறுநாளே கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொடுகிறது. அந்த வகையில் வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்தியர்களை பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பின் விஷயமாகும். எனவே, தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தங்கம் விலை நான்ஸ்டாப்பாக ஏறிக்கொண்டே இருக்கிறது. சில நாட்கள் தங்கம் விலை சற்றே சரிந்தாலும், மறுநாளே கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொடுகிறது. அந்த வகையில் வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை:
சென்னையில் இன்று (சனிக்கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 745 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 61 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா?
அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 17 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 449 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 67 ஆயிரம் 592 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (சனிக்கிழமை) எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்து வருவதும் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர காரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: Gold Rate Today: தங்கத்தை விடுங்க இனி வெள்ளியைக் கூட வாங்க முடியாது போலயே... ஷாக்கடிக்கும் இன்றைய விலை நிலவரம்!