நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே.. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு தமிழக மக்கள் தான் பலிகடாவா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...
மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே கொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒருபுறம் ஒட்டுமொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதையும் படிங்க: போலி வாக்காளர்கள் மூலம் மேற்கு வங்கத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கும்- எச்சரித்த மம்தா!

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே.. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு தமிழக மக்கள் தான் பலிகடாவா முதலமைச்சரே?..
மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களை குறித்து எப்போது தான் யோசிப்பீர்கள்?..
இவ்வாறு அந்த பதிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: பாஜக- திமுகவுக்கு எதிராக ஆக்ரோஷம்… ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்ஸி பரபர அறிக்கை..!