தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வாய்ந்ததும், திருச்சி உறையூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். மக்களின் குறைதீர்க்கும் விதமாக மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும், திருக்கோவிலில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

பிரசித்திபெற்ற இக்கோவிலில் இன்று பூச்சொரிதல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கோவில்நிர்வாகம் சார்பில் உதவிஆணையர் சரவணன் தலைமையில் ஊழியர்கள், உபயதாரர்கள் கிராமமக்கள் உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்கிட பூக்களை கூடைகளில் ஊர்வலமாக கொண்டுவந்து அம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபஆராதனை நடைபெற்றது.
இதையும் படிங்க: பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..

அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவரும் பூக்கள்யாவும் அம்மனுக்கு சாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று அம்மனுக்கு கூடைகளில் பூக்களைக் கொண்டுவந்து சாத்தி வழிபாடு செய்தும், விளக்குகளை ஏற்றியும் வழிபாடு செய்துவருகின்றனர். அதேநேரம் அம்மனுக்கு சாத்தபட்ட பூக்கள்யாவும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. 5 வீரர்கள் படுகாயம்..!