ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது. குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு சென்ற இந்திய அணி, குரூப் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் இன்று மோதியது.
விறுவிறுப்புடன் எதிர்பார்த்த அரையிறுதியின் முதல் போட்டி துபாயில் நடைபெற்றது. இன்று மதியம் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் ஃபீல்டிங்கால் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்க விடாமல் இந்திய அணியின் ஸ்பின்னர்ஸால் தடுமாறியது. இதனால் 20 ஓவர் முடிவில் அதே 20 ரன் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணி 105 ரன்களை எட்டி இருந்தது.

பின்னர் லபுஸ்சாக்னே விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் ஜடேஜா வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடினாலும் விக்கெட் கீப்பர் இங்கிலீஸை ஜடேஜா அவுட்டாக்கினார். ஷமி ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீ ஸ்மித் 73ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க: நானா குண்டா இருக்கே....உருவக்கேலிக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ரோஹித்!!
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மா 28 பந்துகளில் ஆட்டமிழந்தார். இவர் 3 பவுண்ட்ரிகளையும், ஒரு சிக்சரையும் அடித்து அசத்தினார். இதன் மூலம், ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். 10 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து வந்த விராட்கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.

30 ஓவர் முடிவில் இந்திய அணி 3விக்கெட் இழந்து 150 ரன்களை எடுத்திருந்தது. 42.4வது ஓவரில் ஜாம்பா வீசிய பந்தில் கோலி 84ரன்களில் ஆட்டமிழந்து வெளியேரினார். அடுத்ததாக கே.எக். ராகுலுடன் இணைந்து சேர்ந்த ஹர்த்திக் பாண்டியாவும் அவுட்டாகி வெளியேற ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். கடைசியாக இந்திய அணி 4 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று அசத்தியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி - ஏமாற்றிய ரோஹித்... பழித்தீர்ப்பாரா விராட் கோலி!!