8ம் வகுப்பு படிக்கும் மாணவியை அரசு பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மகாதேவகொல்லஅள்ளி கிராமத்தில் செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பள்ளியில் பணியாற்றி வந்த 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவியை பள்ளி கழிவறையில் வைத்து 3 ஆசிரியர்களும் அடுத்தடுத்து அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளி செல்லும் வழியில் மாணவிகளை மடக்கி பாலியல் தொல்லை... ஆபாச செய்கையில் ஈடுபட்ட 7 பேரை அலேக்காக தூக்கிய காவல்துறை!
இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும், கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராமல் இருந்த நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்திய போது இந்த பகீர் சம்பவம் அம்பலமானது.

இதனையடுத்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று இரவோடு, இரவாக கைது செய்தனர். இதனிடையே ஆசிரியர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு மாணவியின் உறவினர்கள், பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; பள்ளி மாணவர்கள் போக்சோவில் கைது!