இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விக்ரம் இருந்து வருகிறார். இவர் அவ்வளவு எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை என்றே கூறலாம். இவர் படத்திற்காக பல சிரமங்களை சந்தித்துள்ளார். சில படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து ஏற்றியுள்ளார். அதேபோல் காசி படத்திற்காக அவர் கண்களை மேலே வைத்தவாறு இருந்ததால் பல சிரமங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதுவாகவே எளிதாக மாறிவிடக்கூடிய அளவிற்கு திறமை மிகுந்தவர் விக்ரம். அவர் நடித்த பிதாமகன் படம் அவருக்கு தேசிய விருதினை பெற்று தந்தது.

அதேபோல் தில், தூள், சாமி, ஜெமினி ஆகிய படங்கள் மெகா ஹிட் படங்களானது. இதனால் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் இன்றளவும் அவரது படங்களுக்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர். விக்ரம் கஷ்டப்பட்டு நடித்த படங்களில் சில வருடங்களுக்கு முன் வெளியான தங்கலாம் படமும் ஒன்று. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து அவர் நடித்த ஸ்கெட்ச், இருமுகன் போன்ற படங்களும் ஹிட் ஆகவில்லை. இதனிடையே அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் ஹிட் அடித்தது. இதில் விக்ரமின் நடிப்பு பெரிதும் பராட்டப்பட்டது.
இதையும் படிங்க: ரஜினியுடன் இவரும் நடித்திருகிறாரா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!!

இந்த நிலையில் சித்தா படத்தின் மூலம் மக்களை கவர்ந்த அருண்குமாருடன் இணைந்து வீர தீர சூரன் என்று படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை அடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் விக்ரம், அருண் குமார், துஷாரா விஜய், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய சுராஜ், நான் ஒரு நடிகரோடு முதன்முறையாக புகைப்படம் எடுத்துக்கொண்டது என்றால் அது விக்ரமோடுதான்.

2005ஆம் ஆண்டு மஜா படத்தின்போது சிங்கப்பூரில் அவரை முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் என்னுடைய ரசிகர் என்று சொன்னார். அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. பிறகு அவரிடம் சார் உங்களுடன் ஒரு ஃபோட்டோ என்று சொல்லி எடுத்துக்கொண்டேன். எனது வீட்டில் என்னுடைய அப்பாவும், அண்ணனும் மிலிட்டரி. நான் மட்டும்தான் மிமிக்ரி. ஒருமுறை விபத்தில் சிக்கி எனது கை உடைந்துவிட்டது. எனவே சினிமா கனவு அவ்வளவுதான் என்று இருந்தது. ஆனால் அந்த சமயத்தில்தான் விக்ரமின் பேட்டிகளை எல்லாம் பார்த்தேன். அவரால் நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் சொன்னாலும்; தன்னுடைய விடாமுயற்சியால் இன்று ஒரு நடிகராக எங்கேயோ அவர் சென்றுவிட்டார்.

அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். எனக்கு மேக்கப் மேன் விக்ரம்: வீர தீர சூரன் செட்டில் விக்ரம் ஈகோ இல்லாமல் பழகினார். அவர் செட்டுக்குள் வந்தால் எல்லோரும் தேனீக்கள் போல் அவரை மொய்த்து பேசுவார்கள். யாராவது அருகில் வராவிட்டால் இவர் அவரை அழைத்து பேசுவார். அதெல்லாம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தன. அதேபோல் விக்ரமுக்கு மும்பையிலிருந்து மேக்கப் மேன் வந்திருந்தார். எனக்கு விக்ரம்தான் மேக்கப் மேன். அந்த அளவுக்கு அவர் எல்லோரின் மீதும் அக்கறை எடுத்துக்கொள்வார் என்றார்.
இதையும் படிங்க: விடுதலை 2 படத்திற்கு வந்த புது ஆஃபர்... உச்சக்கட்ட குஷியில் வெற்றிமாறன்!!