பிரபல தனியார் தொலைக்காட்சியை டிஆர்பியில் நம்பர் ஒன் ஆக கொண்டுவந்த சீரியல் என்றால் அதுதான் தற்பொழுது இரண்டு வருடங்களை கடந்து மிகவும் சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை". இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சால்மா அருண், அனிலா குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்க, இந்த சீரியலில் அண்ணாமலை மற்றும் விஜயா ஆகிய தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முத்த மகனான 'மகோஜ்', பார்லர் வைத்திருக்கும் 'ரோகிணி'யை திருமணம் செய்து கொண்டார், கதையின் கதாநாயகனான 'முத்து' பூக்கட்டி விற்பனை செய்யும் 'மீனா'வை திருமணம் செய்து கொண்டார். அதே போல் 'ரவி' டப்பிங் ஆர்டிஸ்ட்டான 'ஸ்ருதி'யை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரே வீட்டில் எட்டு பேர் கொண்ட குடும்ப பாங்கான கதை தான் இந்த "சிறகடிக்க ஆசை" சீரியல்.

இந்த சீரியலில் மக்களின் ஆழ் மனதில் வில்லியாகவும் பித்தலாட்ட காரியாகவும் அனைவரது மனதில் நடிப்பால் குடிபுகுந்த கேரட்ர் என்றால் அது ரோகிணி கேரக்டர் தான். இவர் எப்பொழுது குடுத்பத்திடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பட்ட ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் ரோகிணிக்கு துணை நிற்பதோடு அடிக்கடி அவருக்கு தக்லைஃப் கொடுத்து வரும் இவர் மிகவும் பிரபலமாகி உள்ளார்.
இதையும் படிங்க: வைரலான அந்தரங்க வீடியோ..! ஒரே ஸ்டோரியில் ஃபுல்ஸ்டாப் வைத்த பிரபல நடிகை..!

இப்படி நடிப்பில் மிகவும் பிசியாக இருக்கும் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக உலா வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த சிலர் இது 'ஏய் தொழில்நுட்பம்' மூலமாக உருவாக்கப்பட்ட மார்பிங் வீடியோ என கூறிவந்தனர்.
மறுபக்கம், இது ஒரு 'casting couch வீடியோ', சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்தி இருப்பார்கள் எனவும் இருபுறமும் மாறி...மாறி... பேசி பலர் பதிவிட்டு வந்த நிலையில், தனது அனைத்து இணையதள பக்கங்களையும் பிரைவேட்டில் போட்டு அமைதியாக இருந்தார் ஸ்ருதி நாராயணன்.

திடீரென தவறு செய்யாத நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்த ஸ்ருதி, பிரைவேட்டில் போட்டிருந்த தனது இன்ஸ்டா தளத்தை மீண்டும் அனைவரும் பார்க்கும் வண்ணம் மாற்றி, நச் என ஸ்டோரி போட்டு அனைவரது வாயையும் அடைத்தார். அதன்படி அவர், அந்த ஸ்டோரியில், தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டு, பிறகு ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

அதில் இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள்? என கேட்டு, அதற்கு பின், உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருந்தார் ஸ்ருதி.

இதனை பற்றி ரசிகர்கள் பேசிக்கொண்டு இருக்க, மறுபடியும் அனைவரது வாயை அடைக்கும் வகையில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் நடிகை ஸ்ருதி, அதில், "நானும் பெண் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் மோசமாக்குகிறீர்கள். இது ஒரு வீடியோ என பார்த்து அதனை காட்டுத்தீ போல பரப்பாதீர்கள்.

வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண் தான். அவர்களுக்கும் என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டை கீழே படித்து பார்த்தால் அனைவரும் என்னை தான் குறை சொல்கிறீர்கள். அந்த வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே"

என வீடியோ லிங்க் வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கேட்பவர்களை கடுமையாக திட்டி இருக்கிறார் ஸ்ருதி.
இதையும் படிங்க: பாடல் நிகழ்ச்சியில் தனது ஆசையை கூறிய பெண்..! சற்றும் தயங்காமல் ராகவா லாரன்ஸ் செய்த செயல்...!