பிரயாக்ராஜில் நடைபெறும் 2025 மகா கும்பமேளாவில், பல துறவிகள், முனிவர்கள், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட வந்துள்ளனர். மகா கும்பமேளாவில் சாத்வி ஹர்ஷா ரிச்சாரியா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஹர்ஷா ரிச்சாரியாவும் சமூக ஊடகங்களில் வைரல்ஆகி வருகிறார். ஹர்ஷ ரிச்சாரியா மகா கும்பத்தில் கலந்து கொள்ள ஒரு தேரில் வந்தார். இந்த நேரத்தில், அவர் நெற்றியில் திலகமும், மலர் மாலையும் அணிந்திருந்தார். அவர் மகா கும்ப மேளத்தின் 'மிக அழகான சாத்வி' என்றும் அழைக்கப்படுகிறார்.

ஹர்ஷா ஒரு மீடியாவில் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இப்போது அவர் ஒரு சாத்வியாக மாறிவிட்டார். ஹர்ஷா எப்படி திடீரென்று ஒரு சாத்வி ஆனார்? ஹர்ஷா ரிச்சாரியா சமூக ஊடகங்கள் புகழ்பெற்றவர். இன்ஸ்ட்ராகிராம் ஐடில் அவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். அவர் 2 வருடங்களாக சாத்வியாக இருக்கிறார். ஹர்ஷா ரிச்சாரியாவின் குரு ஆச்சார்ய மகாமண்டலேஷ்வர் சுவாமி ஸ்ரீ கைலாஷானந்த கிரி ஜி மகராஜ். நிரஞ்சனி அகாராவுடன் தொடர்புடையவர். சாத்வி ஆவதற்கு முன்பு, ஹர்ஷா ஒரு மாடலாகவும், பிரபல தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: ஏலேய் மாட்ட விட்றா... களத்தில் வீரரை அடித்த காளையின் ஓனர் - களேபரமான வாடிவாசல்!

உத்தரகண்ட் மாநிலத்தில் வசிக்கும் ஹர்ஷா ரிச்சாரியா இன்னும் முழுமையான சாத்வியாக மாறவில்லை. அவர் இன்னும் சாத்வி ஆகும் பாதையில் இருப்பதாகவும், தன் குரு தேவனிடமிருந்து இன்னும் தீட்சை பெறவில்லை என்றும் கூறுகிறார். இந்து மதத்தில், நாக சாது-துறவி அல்லது சாத்வி ஆக குருதேவரிடமிருந்து தீட்சை பெறுவது மிகவும் முக்கியம். அவர் இன்னும் அந்த தீட்சையைப் பெறவில்லை.
சுவாமி கைலாஷானந்த கிரி ஜி மகராஜ் ஒரு சிறந்த துறவி. அவர் தனது தவம், புலமை மூலம் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் பிரபலம். சுவாமி கைலாஷானந்த கிரி ஜி மகராஜ் நிரஞ்சனி அகாராவின் ஆச்சார்ய மகாமண்டலேஷ்வர் ஆவார். அவர் லட்சக்கணக்கான நாக சாதுக்களுக்கும் ஆயிரக்கணக்கான மகாமண்டலேஸ்வரர்களுக்கும் தீட்சை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: 'கவுன்சிலிங்' என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்; 45 வயது உளவியல் டாக்டர் 'போக்சோ' சட்டத்தில் கைது...