ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூர் மசிது மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு. இவரும் புத்தலப்பட்டு பகுதியை சேர்ந்த சாய் தேஜ் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். எம்பிஏ பட்டதாரியான யாஸ்மின் பானு, பாலாஜிநகர் காலனியைச் சேர்ந்த சவுகத் அலியின் மகள். அதே சமயம் பி.டெக் பட்டதாரியான சாய் தேஜா தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நெல்லூருக்கு சென்று தங்களது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று, திருப்பதியில் உள்ள முத்யாலா ரெட்டிபள்ளி காவல் நிலையத்தை அணுகி பாதுகாப்பு கோரினர்.

இதனை அடுத்து போலீசார் யாஸ்மின் பானுவின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை வழங்கினர். தம்பதிகளையும் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு யாஸ்மின் பானுவின் பெற்றோர் அவருடன் தொலைபேசியில் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, சாய் தேஜுக்கு போன் செய்த யாஸ்மின் பானுவின் பெற்றோர், அவரது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறி உள்ளனர்.
தந்தையை ஒருமுறை பார்க்க யாஸ்மின் பானுவை அனுப்பும்படி சாய் தேஜுவிடம் கேட்டு கொண்டனர். இதனால் சாய் தேஜ் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு யாஸ்மின் பானுவை ஒரு காரில் சித்தூருக்கு அழைத்து கொண்டு வந்தார். அங்கிருந்து, யாஸ்மின் பானுவை அவரது சகோதரர் வேறு காரில், அம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இருவரும் காதல் திருமணம் செய்துள்ளதால், உறவினர்கள் கோவத்தில் இருப்பார்கள். இந்த சமயத்தில் மாற்று சாதியை சேர்ந்த சாய் தேஜ் உறவினர்கள் முன்பு வர வேண்டாம். அது அவ்வளவு நன்றாக இருக்காது. மாப்பிள்ளை இன்னொரு நாள், அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் போது வரச்சொல்லலாம் என்று அவரது அண்ணன் யாஸ்மின் பானுவிடம் சொல்லியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற பின் யாஸ்மின் பானு, தனது கணவர் சாய் தேஜூவை தொடர்பு கொள்ளவில்லை. சாய் தேஜூ எவ்வளவு முறை முயன்றும் யாஸ்மின் பானுவின் எண்ணை அவராளும் தொடர்பு கொள்ள முடியவில்லை. யாஸ்மின் பானுவின் வீட்டில் உள்ள அனைவரது போனும் சுவிட் ஆஃப் செய்யப்பட்டதால், சந்தேகம் அடைந்த சாய்தேஜ் உடனடியாக யாஸ்மின் பானு வீட்டிற்கு சென்று யாஸ்மின் பானு எங்கே என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் பிரசவம்.. கழுத்தை நெறித்து கர்ப்பிணி கொலை.. கணவனை பிடித்து ஆட்டிய சந்தேகப்பேய்..!

இதற்கு யாஸ்மின் பானுவின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் இருப்பாள் சென்று பார்த்துக்கொள் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த சாய்தேஜ் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று தேடிப் பார்த்துள்ளார். யாஸ்மின் பானு என்பவரை யாரும் பார்க்கவில்லை என்று கூறி உள்ளனர். அதன் பின் யாஸ்மின் பானுவின் போட்டோவை காண்பித்து கேட்ட போது தூக்குமாட்டி கொண்டு இறந்ததாக வந்ததால் பிணவறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இதைக் கேட்ட சாய்தேஜ், மனம் நொந்து போனார். தனது மனைவி யாஸ்மின் பானு, தற்கொலை செய்யக்கூடியவர் அல்ல. தந்தையை பார்க்க வேண்டும் என வந்தவர். இந்த நிலையில் யாஸ்மின் பானுவின் மரணத்திற்கு அவரது பெற்றோர்களே காரணம் என்று சாய் தேஜ் குற்றம் சாட்டினார். யாஸ்மின் பானுவை அழைத்துச் சென்று கொலை செய்ததாக அவர் போலீசில் புகார் செய்தார். இதனால் யாஸ்மின் பானுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள சித்தூர் நகர போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்மாவே எனக்கு விஷம் கொடுத்தாங்கடா.. ஆந்திராவில் 17 வயது சிறுமி மர்ம மரணம்.. கௌரவ கொலை காரணமா?